Showing posts with label பாலன் ஹரிதாஸ். Show all posts
Showing posts with label பாலன் ஹரிதாஸ். Show all posts

Friday, 8 May 2020

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு! மக்கள் போராட்டத்தால் மாறியத் தீர்ப்பு !

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, திருமணம், இறப்பு போன்ற அத்தியாவசிய நிகழ்வுகளுக்குக் கட்டுப்பாடு, வேலை இல்லை, தொழில் இல்லை, உணவு தவிர்த்த அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்குக் கூட அரசு தடை விதித்திருக்கிறது. பெறுபான்மையான மக்கள் வருமானம் இல்லாத இந்தச் சூழலில், அதிக அளவில் கூட்டம் சேரும்மென்ற அடிப்படையில் ஏற்கனவே டாஸ்மாக் மூடப்பட்டிருந்தது. வருமானம் ஈட்டுவதற்காக டாஸ்மாக்கை திறப்பார்களேயானால் கோயம்பேடு போல நோய்த் தொற்று பரவும் இடமாக டாஸ்மார்க் மாறும் என்று 06.05.2020 அன்று மக்கள் அதிகாரம், மக்கள் ஆயம் சார்பாக நாம் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். நமது சார்பாக *மூத்த வழக்கறிஞர் வைகை மற்றும் பாலன் ஹரிதாஸ்* அவர்கள் வாதாடினார்.

நமது தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைத்தாலும், அவற்றிற்கு எந்தவித பதில்களையும் எடுத்துரைக்காமல் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 90 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது உட்பட சில விசயங்களை அரசு தரப்பில் முன் வைத்தனர். நீதிமன்றமும் டாஸ்மாக்கை திறக்க தடைகோரிய வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் சில ஆகாத கட்டுப்பாடுகளை விதித்து திறக்க அனுமதி அளித்தது.

ஆனால், நேற்றைய ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பெண்கள் வீதியில் இறங்கி ஆவேசத்துடன் போராடினர். சில இடங்களில் கடைகளை மூடவும் வைத்தனர். அமைப்புகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நீதிமன்றமும் மக்களின் விமர்சனத்திலிருந்து தப்பவில்லை.

இப்படி இருக்கக்கூடிய சூழலில் மீண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பாக மனு தாக்கல் செய்திருந்தார்கள். ஏற்கனவே மனு தாக்கல் செய்து வழக்கு நடத்திய வழக்கறிஞர் G.ராஜேஷ் இணையவழியில் விற்பனை செய்வதை அரசு தொடங்கவில்லை. அதுவரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று ஒரு இடைநிலை மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த இடைக்கால மனுவுடன் நாம் தாக்கல் செய்த வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் இன்று அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு லாக் டவுன் முடியும் வரை டாஸ்மாக் நேரடி விற்பனைக்கு தடை விதித்தது.

பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம்தான் இன்று நீதிமன்றத் தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

நாளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிந்தோம். உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

40 நாட்கள் தந்த இடைவெளியைப் பயன்படுத்தி டாஸ்மாக்கை முழுமையாக மூட வேண்டும் என்பதே தமிழக மக்களின் - பெண்களின் கோரிக்கை.

சுஜிம்ராஜ் மில்ட்டன்
தற்போது கரோனா காலத்திலாவது மூட வேண்டும் என்பதே வழக்கு. மக்களின் கோப ஆவேசத்தைப் பார்த்துதான் உயர்நீதிமன்றம் தீர்ப்பை மாற்றி டாஸ்மாக்கை மூடியுள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்ய துடிக்கிறது குடி கெடிக்கும் அரசு.

உச்ச நீதிமன்றத்திலும் நமது சட்டப் போராட்டத்தை தொடர்வோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் அரசுக்குச் சாதகமாக அமையலாம். ஆனால் டாஸ்மாக் கொடுமைக்கு பலியான மக்களின் போராட்டம் அதற்கு எதிராகவும் பொங்கி எழும் என்பது நிச்சயம். மக்களின் வேதனை, வலியின் உணர்வோடு வழக்கை நடத்தி டாஸ்மாக்கை மூடும் உத்தரவை பெற நாமும் சட்டப் போராட்டத்தை நடத்திடுவோம்.

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு

தோழமையுடன்,
சு. ஜிம்ராஜ் மில்ட்டன்
வழக்குரைஞர்

மக்கள்உரிமைப் பாதுகாப்பு மையம்
08.05.2020

தொடர்புடைய பதிவுகள்

டாஸ்மாக்கை மூடச்சொன்ன முதியவர் சிறைக் கொட்டடியில்!