ஆர்.எஸ்.எஸ்-ன் ஊதுகுழலாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி என்பவரை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததன் மூலம், நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி வருகிறது. இதனால் நீதித்துறையின் மாண்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் Arakalagam ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே. பாருங்கள், பகிருங்கள்!
ஹிஜாப்: இஸ்லாமியப் பெண்கள் கல்லூரிக்கு பர்தா அணிந்து வரக்கூடாது என பார்ப்பன ஆர்எஸ்எஸ் காவிக் கும்பல் தலைமையிலான பாஜக அரசு தடை விதித்ததையடுத்து ஆர் எஸ் எஸ் கும்பல் கர்நாடகாவில் மிகப்பெரும் கலவரத்திற்கு வித்திட்டு வருகிறது. ஹிஜாப் பிரச்சனை இன்று நாடெங்கிலும் பதட்டத்தை ஏற்பத்தி உள்ளது. கலவரத்தில் ஈடுபடும் பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பலை அடித்து விரட்டாமல் இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட முடியாது. எனவே மனுதர்மத்தைக் கொளுத்துவதோடு பார்ப்பன காவிக் கும்பலை அடித்து விரட்ட அழைப்பு விடுக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.
14.12.2021 அன்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் ஆற்றிய உரை.
00000
அனைவருக்கும் வணக்கம்,
நாடு எத்தகைய நெருக்கடியான, அபாயகரமான சூழலில் இருக்கிறது என்பதை மக்கள் உணராமல் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.
ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படும் யு-டியூபர் மாரிதாஸ் என்பவர் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவரது பிணை மனு 13.-12-2021 திங்கள் காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. எத்தனையோ வழக்குகள் வரிசையில் காத்துக் கிடக்கும் போது, இந்த வழக்கை முதல் வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரிக்கிறது. முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. தமிழக அரசு இவ்வழக்கை விசாரிக்கக் கால அவகாசம் கோருகிறது. ஆனால் நீதிபதியோ, அன்றே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். மாரிதாஸ் மீது புகார் கொடுத்த புகார்தாரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர் வெளியூரில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஆன்லைனிலேயே வழக்கு விசாரிக்கப்படுகிறது. தான் காரில் பயணம் செய்வதால் எதையும் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார். அவரும் அவகாசம் கோருகிறார். ஆனால் இதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே மாரிதாஸ் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தள்ளுபடி செய்யப்பட்டது மிகச் சாதாரண வழக்கு அல்ல, தேசத்துரோக வழக்கு, 124 A, IPC. வழக்கு போடப்பட்ட நான்காவது நாளிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஆனால் தோழர் காளியப்பன், தோழர் கோவன், தோழர் வாஞ்சிநாதன், தோழர் ராஜு மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் அவர்கள் சில மாதங்கள் சிறையில் இருந்து போராடிய பிறகுதான் பிணையில் வெளி வரமுடிந்தது. ஆண்டுகள் கடந்து போனாலும் இன்றும் அவர்கள் அந்த வழக்குகளுக்காக நீதிமன்ற வாசற்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் வரவரராவ் உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் தேசத்துரோக வழக்குகள்தான். இவர்களால் இன்றுவரை வழக்கிலிருந்து விடுபட முடியவில்லை. ஆனால் மாரிதாஸ் மீதான வழக்கு நான்கு நாட்களிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவினர், நீதிபதிகள் அணி ஒன்றை வைத்துள்ளனர் என்பதைத்தானே இது உணர்த்துகிறது.
இராணுவம், போலீசு, RAW, IB, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட அரசின் அத்தனை துறைகளிலும் அவர்கள் தங்களது அணியை ஏற்கனவே உருவாக்கி விட்டனர். இதுதான் அபாயம். இந்த அபாயத்தைத்தான் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
சுதா பரத்வாஜ் அவர்களுக்கு தற்போதுதான் நிபந்தனையில் பிணை கிடைத்துள்ளது. ஸ்டேன் சாமி மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் பிணை கோரி முறையிட்ட போதும் ஈவிரக்கமின்றி பிணை மறுக்கப்பட்டதால் அவர் சிறையிலேயே மாண்டு போனார். நீரிழிவு நோயினால் சிறுநீர் கழிக்கக் கூட சிரமப்படும் வரவர ராவ் மீதான பிணை மனு நிராகரிக்கப் படுகிறது. ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்களின் ஊதுகுழலான அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன? நடப்பது சங்க்பரிவார சனாதனிகளின் ஆட்சிதான் என்பதை உணர்த்த வில்லையா? "சனாதனம்தான் நாட்டின் பண்பாடு" என வாரணாசியில் மோடி பேசியிருப்பதைப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்.
ஊடகவியலாளர்களைச் சாடுவதன் மூலம் சாத்தான்குளம் காவல்நிலைய லாக்கப் படுகொலையை திசை திருப்புகிறார் ஆர்எஸ்எஸ் சின் மாரிதாஸ் என்பதை விளக்குகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்.
நம்முடன் இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை செயல்பாட்டாளராக இருந்த மூத்த வழக்குரைஞர் முத்து கிருஷ்ணன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்னளவில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தாலும், இந்துத்துவ மதவெறியை தூண்டி, நாட்டை துண்டாடும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜெ.பி. இந்துத்துவக் கும்பலை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர். ஆரம்ப காலங்களில் காங்கிரஸ், ஜனதா கட்சியில் இருந்தவர். அவர் பேசிய உரைகள் இன்றைக்கும் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றன.
அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ம் ஆண்டு அயோத்தி வழக்கிற்கு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து நாம் நடத்திய கருத்தரங்கத்திலும், பின்பு உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கிற்கு வழங்கிய இறுதித் தீர்ப்பினை எதிர்த்து நாம் கடந்த ஆண்டு நடத்திய கருத்தரங்கத்திலும், சமீபத்தில் செய்த பெரிய அறுவை சிகிச்சை செய்திருந்த போதிலும் பங்கேற்று, தனது எதிர்ப்பைத் தெளிவாகவும், துணிவாகவும் முன்வைத்தார்.
இவர் தொடர்ந்து நாம் முன்னெடுக்கும் சட்ட ரீதியான செயல்பாடுகளுக்கு ஆலோசனை தந்துகொண்டும், நம்முடைய நல்ல சமூக செயல்பாடுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டும் நம்மை அன்பாக அரவணைத்தும் வந்தார். நாம் வயதில் சிறியவர்கள், இளைஞர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாகவும், நட்பாகவும் பழகும் தம்மை உடையவர்.
அவருக்கு வயது 79. அவருடைய மகன் அருண்குமார் மூலம் நாம் இரங்கல் செய்தியை அறிந்தோம். மேலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் அனைவருக்கும் இவரது இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. அவர்கள் அனைவருக்கும் எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை.
தொடர்புடைய பதிவுகள்:
CAA வுக்கு எதிரான அவரது உரை
https://m.facebook.com/story.php?story_fbid=2542734939345536&id=244283735645979&sfnsn=scwshwa&extid=1tIcmRnBOstpREYn&d=w&vh=e