Showing posts with label ஹோமியோபதி. Show all posts
Showing posts with label ஹோமியோபதி. Show all posts

Monday, 27 July 2020

ஹோமியோபதி மருத்துவ முகாம்கள்! களத்தில் PRPC வழக்குரைஞர்கள்!!

நண்பர்களே!

கரோனா பேரிடரின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுநலன் வழக்குகள், உதவிக் குழுக்கள் என நாம் செயல்பட்டு வருகின்றோம்.

அதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் ஹோமியோ மருந்தை (ஆர்சனிக் ஆல்ப் 30c) மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வழங்கி வருகின்றோம்.

குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் நோய்த் தொற்றை தடுக்கும் முயற்சியாக மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றோம். நமது அமைப்பு செயல்பாடுகளுடன் பயணித்து வரும் மருத்துவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மூலம் சென்னையின் பல பகுதிகளில் நடத்தி வருகின்றோம்.

அந்த வகையில் மதுரவாயல் பகுதியில் கடந்த 23.07.2020 மற்றும் 25.07.2020  அன்றும் அங்கு செயல்பட்டு வரும் RSYF அமைப்பு மற்றும் பகுதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று முகாம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் 1000 பேருக்கு மருந்து வழங்கப்பட்டது. நமது சார்பில் வழக்குரைஞர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.   Dr.சுப்ரியா மற்றும் Dr.கீதா ப்ரியா ஆகியோரின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு மருந்துகளை வழங்கினர்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.