Showing posts with label Covid. Show all posts
Showing posts with label Covid. Show all posts

Tuesday, 15 September 2020

இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித் தொகை!

இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை !

BAR council Chairman அவர்களைச் சந்தித்து நன்றி அறிவிப்பு!!

சென்னையில் அரசு சட்டக்கல்லூரி !

BAR council Chairman உறுதி!!

AIBE தேர்ச்சி பெறாதவர்களுக்கும் COVID உதவித்தொகை தர நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை இளம் வழக்குரைஞர்கள் சார்பாக 176 இளம் வழக்குரைஞர்கள் ஆதரவோடு பார்கவுன்சிலுக்கு 18.04.2020 & 24.05.2020 அன்று இரண்டு மனுக்கள் அளித்திருந்தோம்.

அம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது AIBE தேர்வாகாத வழக்குரைஞர்களுக்கும் சென்ற வாரம் முதல் 4000 ரூபாய்க்கான Cheque வழங்கப்பட்டு வருகிறது.

BAR council ன் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 3.30 மணிக்கு BCTNP Chairman திரு. அமல்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தோம்.

நாம் சென்ற விஷயத்தை தெரிந்துகொண்ட பின், "உண்மையில் உங்களது மனுக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள வழக்குரைஞர்களுக்கு என்னால் இதனைச் செய்ய முடிந்தது." என்று வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவரது வார்த்தைகள் நம்முடைய உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக இருந்தது.

பிறகு Chennai Young Advocates செயல்பாடுகளான Physically Challenged PIL, Manual Scavengil PIL, Legal Seminars போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டோம். நமது செயல்பாடுகள் மிகுந்த மகிழச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

Chennai Young Advocates குழுவிலுள்ள மூவர் (Thilagavathy, Singaravelan, Sarathkumar) University Gold Medal வாங்கும்பொழுது மேடையில் அவரிடம் வாழ்த்து பெற்றதை நினைவுகூர்ந்து மகிழ்ந்தார்.

நாம் சென்னை சட்டக் கல்லூரிக்குள் 16 நாட்கள் தங்கி போராடியதையும், அதன்பின் இடமாற்றத்தை மையப்படுத்தி நீதியரசர் திரு.ஹரிபரந்தாமன் அவர்களை அழைத்து பார்கவுன்சில் கட்டிடத்தில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தியதை நினைவு படுத்தியதோடு, புதுப்பாக்கம் சட்டக்கல்லூரி பொங்கல் தினத்தில் சென்னையில் சட்டக்கல்லூரி மீண்டும் கொண்டுவரப்படும் என பேட்டியளித்தது எங்களுக்கு மிகுந்த மன நிறைவாக இருந்ததென பகிர்ந்து கொண்டோம்.

சட்டக் கல்லூரிக்காக நாம் நடத்தியப் போராட்டத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார். அதன் பின் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.

பிறகு, "எனது பதவிக்காலம் முடிவதற்குள் சென்னையில் நிச்சயம் அரசு சட்டக்கல்லூரி கொண்டுவரப்படும்" என்று உறுதியளித்தார்.

மேலும், மாவட்டந்தோறும் சட்டக்கல்லூரி திறக்கப்பட BAR Council தீர்மானம் நிறைவேற்றி, 09.09.2020 அன்று தமிழக அரசிடம் அளித்த மனுவினை கொண்டுவரச்சொல்லி நம்மிடம் காண்பித்தார்.

உதவித்தொகை வழங்கப்பட்டதை விட இந்தத் தகவல்கள்தான் உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்பதை பகிர்ந்து கொண்டோம்.

பின்பு, நமது செயல்பாடுகளை அங்கீகரித்து, இளம் தலைமுறையினர் இப்படி சமூக உணர்வோடு செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறி, சென்னை இளம் வழக்குரைஞர்களுக்கு தமது பாராட்டுதலைத் தெரிவித்தார்.

இறுதியாக, இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்த Bar Council Chairman அவருக்கும், இதர Bar Council உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து, நாம் கொண்டு சென்ற நன்றி அறிவிப்புக் கடிதத்தை கொடுத்து வந்தோம்.

தொடர்ந்து பணியில்...

தகவல்

சென்னை இளம் வழக்குரைஞர்கள்

#Chennai_Young_Advocates

தொடர்ந்து உற்சாகமாக வேலை செய்யும் இளம் வழக்கறிஞர்களை வாழ்த்துகிறோம்! 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

Friday, 22 May 2020

அரசு தலைமை மருத்துவர்களுக்குக் கரோனா! மூடிமறைக்கும் தமிழக அரசு!

*ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 15 துறைகளின் முதன்மை மருத்துவர்களுக்குக் (Chief Doctors) கரோனா நோய்த்தொற்று உறுதி…!*
*பொதுவெளியில் தெரியப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்யும் தமிழக அரசு…!!*

27.03.2020 அன்று தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்- கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி PRPC சார்பில் (சு.ஜிம்ராஜ் மில்ட்டன்) பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தோம். அவ்வழக்கில் முன்னணிப் பணியாளர்களின் (Front line Workers) பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக்கோரிய இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தோம்.

இந்த வழக்கில் 13.05.2020  மற்றும் 16.05.2020 தேதிகளில் அரசு தரப்பிலிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த  அறிக்கைகளிலும் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவ மனைகளின் எண்ணிக்கை,  மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, Personal Protective Equipment (PPE) எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள்,  அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த எந்தவித தகவல்களும் இல்லை.

அவ்வறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக 18.05.2020 அன்றைய விசாரணையில் நாம் மறுப்பு அறிக்கையை  (Objections) தாக்கல் செய்தோம். அதில் PPE குறித்து WHO, தேசிய நோய்த் தடுப்பு மையம் (NCDC), சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றில் கொடுத்த விளக்கத்தைக் குறிப்பிட்டு, அரசு மருத்துவர்களுக்குக் கொடுத்தது PPE Kit – டே கிடையாது, அது வெறும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மேலுடைதான் (Surgical Apron) என்று குறிப்பிட்டிருந்தோம்.
10.05.2020 அன்று 37 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 112 சுகாதாரப்  பணியாளர்களுக்குக் கரோனா உறுதியாகியிருப்பதை குறிப்பிட்டு கூடுதலாக COVID அல்லாத பிற நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் பிற பிரிவு மருத்துவர்களுக்கும் (Surgery, Maternity Ward, etc) நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் முறையான பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை, தனிமைப்படுத்தல் (Quarantine) வழங்கக்கோரியிருந்தோம்.

இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் Pediatrician (2), Radio diagnostic (2), Surgery (1), Medicine (2), Dermatologist (1) உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 15 முதன்மை மருத்துவர்களுக்கு (Chief Doctors) கரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருக்கும் செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த Dr.ரவீந்திரன் மற்றும் Dr.சாந்தி ஆகியோர்  இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் 15 முதன்மை மருத்துவர்கள் நோய்த்தொற்று குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் தமிழக அரசால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

கரோனா பிரிவில் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சையளிக்காத முதன்மை மருத்துவர்களுக்கே இந்த நிலை எனும்பொழுது, அடுத்த நிலையிலுள்ள நேரடி சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்களின்  நிலை கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் ராயபுரம் அரசு பிரசவ மருத்துவமனையில் 47 கர்ப்பிணிப் பெண்களுக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருப்பதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் போல, மருத்துவமனை நோய்த்தொற்றின் மையப் பகுதியாக (Hotspot) இருக்கிறது.

எனவே தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் High Risk Zone (அ) Moderate Risk Zone என மட்டுமே தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். Low Risk Zone என்று வகைப்படுத்தக்கூடாது.

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்படும் நிலையில், மருத்துவமனைகள்தான் கரோனா நோய்த்தொற்றை தீவிரமாக எதிர்த்துப் போராடும் மையப்பகுதியாகிறது.

அவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் பட்சத்தில் நிலைமை மேலும் தீவிரமாகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த அபாய நிலையை உணர்ந்து தமிழக அரசானது, கரோனா வார்டு மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் கரோனா அல்லாத பிற துறை (Other Departments) வார்டுகளில் நேரடி சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் முறையான PPE kit கள், தனிமைப்படுத்தல், பரிசோதனை செய்வதோடு, கரோனா நோய்தொற்று இல்லாத பிற  நோயாளிகளுக்கும் பரிசோதனையை உடனே செய்யவேண்டும்.

மேலும் துவக்கத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதியான மருத்துவர்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்து வந்தது போலவே தினசரி செய்திக்குறிப்பில் (Daily Bulletin) மருத்துவர்கள் நோய்த்தொற்று குறித்தும் தனி அட்டவணை வெளியிடவேண்டும்.

*முன்னணிப்  பணியாளர்களின் இந்த அவல நிலைக்குத் தீர்வு காண, அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்ப வேண்டும்*.

- *வழக்கறிஞர்*
*சு. ஜிம்ராஜ் மில்ட்டன்*
சென்னை கிளை செயலாளர் –
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புடைய பதிவுகள்