Wednesday 20 July 2022

கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதி மரணம்! குற்றவாளிகளை பாதுகாக்கும் தமிழக அரசு!

கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவி மர்மமான முறையில் 12 ஆம் தேதி இரவு இறந்துள்ளார். அது 13 ஆம் தேதி தான் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவியின் மரணத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் இருப்பதாகக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போராடிய மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மாணவியின் தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளர் வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்! ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுங்கள்.


Thanks: galatta voice


No comments:

Post a Comment