Monday 31 May 2021

பத்ம சேஷாத்ரி: சுப்பிரமணிய சாமியின் திமிர் பேச்சு!

சென்னை, பத்ம சேஷாத்ரி பள்ளி மீது மாணவிகள் தரப்பிலிருந்து பாலியல் புகார் எழுந்ததையொட்டி ராஜகோபால் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி அப்பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுத்தால் திமுக ஆட்சியைக் கலைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி. அவர் இவ்வாறு பேசியது சட்டப்படி தேசத்துரோகக் குற்றமாகும். இந்த விவகாரம் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் விரிவான காணொளி பாருங்கள். பகிருங்கள்!

நன்றி: Arakalagam tv


Monday 24 May 2021

'சங்கத்தலைவனுக்கும்' பங்கிருக்கு!

சங்கத்தலைவனுக்கும் பங்கிருக்கு!

மே-22 தியாகிகள் நினைவு நாளில் PRPC-யின் zoom மீட்டிங் & பூவையா என்ற JP
தலைப்பு குழப்புதா?
அப்படித்தான் குழப்பும்.
அதுக்கு ஒன்னுஞ் செய்ய முடியாது...
"என்னண்ணே நினைவஞ்சலி பிளக்ஸ் போர்டு வந்துருச்சா..."
மே-21, இரவு10.30 மணிக்கு ஸ்டெர்லைட்டுக்கு பக்கத்து தெற்கு வீரபாண்டியபுரம் பூவையா என்ற ஜெயப்பிரகாஷ் (JP) அவர்களுக்கு போன் செய்கிறேன்.
"வந்துருச்சி சார், நான் பாக்கல, அம்மா சொன்னாங்க" என்றார்.
"அப்படியா வந்ததே தெரியாம ஏதும் முக்கியமான வேலையில இருந்தீங்களா?"
"இல்ல சார், விஜய் டிவியில சமுத்திரகனியும், கருணாஸும் நடிச்ச சங்கத்தலைவன் படம் போட்டாங்க,10 மணி வரை இந்தப்படம் பார்க்கும் போது வேற எந்த நினைப்பும் வரல சார்...
இப்ப என்னன்னா... பிளக்ஸ எடுத்து நைட்டே கட்டணும் போல இருக்கு, ஏற்பாடு பண்ண போறோம், கம்பெடுத்து போடணும் சார்" என்றார்.
"சரி, நைட் எதுக்கு?, மத்தவங்க தூங்கி இருப்பாங்க. காலையில சேர்ந்து கட்டுங்கண்ணே"
"சரிங்க சார் அப்படியே பண்ணிருவோம்" என்றார். செல்போனை வைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் "தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு நினைவேந்தல் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு வைக்கிறோம், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசுனா நல்லா இருக்கும்" என்று PRPC சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மில்டன் என்னிடம் பேசினார்.
அதற்குப் பிறகு, நான் போராட்டக்களத்தில் இருந்த பல முன்னணியாளர்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பேசினேன்.
"அதைப்போல பூவையா அவர்களிடமும் கேட்போம். அவர் பேசத் தயங்குவார். ஒருவேளை அவர் தயங்கினால், அவரது மனைவியையோ அல்லது அவரது அம்மா ஜெயலட்சுமி அவர்களையோ பேசச் சொல்லலாம்" என்று நினைத்து தான் செல்போனில் கூப்பிட்டேன். "பூவையாண்ணே இதுமாதிரி நம்ம மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்துற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் நாளை காலையில 11 மணிக்கு, உங்க போராட்ட அனுபவம் கவர்மெண்ட்டுக்கு நாம வைக்கக்கூடிய கோரிக்கைகள், இதெல்லாம் வைச்சு, நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்".
"யாரெல்லாம் பேசுகிறார்கள் சார்" என்றார்.
சரி... இந்த பெயரெல்லாம் சொன்னால், கண்டிப்பாக அவர் பேச மாட்டார் என்று நினைத்து தான் "ரிட்டயர்டு ஜட்ஜ் அரிபரந்தாமன் சார், நம்மளுக்கு மெட்ராஸ்ல கேஸ் நடத்தின லாயர் பாலன் ஹரிதாஸ் சார், டெல்லி லாயர் சபரீஸ் சார், விசிகட்சியின் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, பிரபல ஊடகவியலாளர் செந்தில்வேல் சார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் சார், அப்புறம் நம்ம வாஞ்சிநாதன் சார் பேசுறாங்க" என்று கூறிவிட்டு மௌனமானேன்.
"சரி சார் பேசுவோம், நான் பேசுறேன் சார்" என்றார். எனக்கு சந்தோசமும், வியப்பும் ஏற்பட்டதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஏனென்றால் அந்த மீட்டிங்கில் பேசப்போகிற தூத்துக்குடியின் பல பகுதிகள் - கிராமங்களை சேர்ந்த மீளவிட்டான் AS முத்து, பூவையா ஆகியோரைத் தவிர குமாரட்டியாபுரம் அ.முருகன், பண்டாரம்பட்டி வசந்தி அம்மா, மடத்தூர் சிம்லா, புதுத்தெரு ஆன்ஸ், பெரியநாயகிபுரம் மணி, இறந்த கிளாஸ்டன் மூத்த சகோதரி பாத்திமாநகர் ஜெனரோஸ், திருநங்கை சகோதரி ரீமா என்ற பியூட்லின், முத்தையாபுரம் சேமா சந்தனராஜ், தாளமுத்து நகரின் ராஜபாளையம் மைக்கேல் உட்பட ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்களில் பலர் இதற்கு முன்பு ஏதாவது ஒரு வகையில் போராட்டக்களத்தில் மீடியாவிலும், சிலர் அவர்களது ஊர் பிரச்சினைகளை சமூக வலைதளங்களிலும் பேசியவர்கள். ஆனால் பூவையா அவர்கள் பேட்டி கொடுக்க, சமூக வலைதளங்களில் பேச தயங்குவார். கூச்சப்படுவார். அவரை பேசுமாறு இதற்கு முன்பு பல நிகழ்வுகளில் கூறும்பொழுது
"நான் ஒரு ஆளுன்னு என்னை பேச சொல்றீங்க" என்பார். அதிமுக அரசு ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுக்க மாவட்டாட்சியர் கருக் கேட்பு கூட்டம் நடத்தினார். எதிர்ப்பு தெரிவிக்க வந்த பூவையா ஆலை திறக்கப்படும் துயரம் கண்டு அழுது கதறியிருப்பார். செய்தி சேனல்களில் அவரை நீங்கள் ஒரு வேளை பாத்திருக்கலாம்.
இதற்கு எதற்கு பூவையாவை பேச வேண்டும்.
காரணம் இது தான்.
அவரது ஊரில் மட்டும்தான் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள். அது வேறு ஒன்றுமில்லை. ஸ்டெர்லைட்டின் பல காண்ட்ராக்டர்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள். பெரிய தலைக்கட்டுகாரர்கள். அப்படிப்பட்ட ஊரில் தான் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களை பூவையா களத்தில் திரட்டியவர். மே-22 துப்பாக்கி சூடுக்கு இரண்டு மூன்று மாதம் கழித்த பிறகிலிருந்து சமீபகாலம் வரை ஸ்டெர்லைட் நிறுவனம் செடி நடுவது, தையல்மிஷின் பயிற்சி கொடுப்பது, கல்வித்தொகை கொடுப்பது, நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்ற பெயரில் ஆலையின் அதிகாரிகள், பணிபுரிபவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் ஆட்களைப் பிடிக்க வருவார்கள்.


பூவையா உடனடியாக காவல் துறைக்கும், VAO, RI, தாசில்தார் என தகவல் சொல்வார். "சீல் வச்சி பூட்டுன கம்பெனி உனக்கென்ன ஊருக்குல்ல வேலை?, கொரானா காலத்துல இதுக்கு அனுமதி கொடுத்தது யார்?" என்று கேட்பார். "அரசின் அனுமதி இல்லாமல் எங்க ஊருக்குள்ள வந்து அதக் கொடுக்குறேன், இதக் கொடுக்குறேன்னு வந்திங்கன்னா நடக்குறதே வேற" என்பார்.
"ஊருல மரம் வைக்க இப்ப வந்துட்டீங்களே வெக்கமில்லாம.., 25 வருஷமா எங்கய்யா போனீங்க? இதுவரை ஸ்டெர்லைட்டு கம்பெனியை சுத்தி மரம் வச்சி, பசுமை வளையம் வைக்க துப்பிருக்கா?" என்பார்.
பிரச்சனை ஏற்பட்டு பெரிதாவதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் போய்விடுவார்கள். இதுதான் பூவையா.
ஆதரவாளர்கள் இவருக்கு விலை பேசுவார்கள், போலீஸ் மிரட்டும் (இப்ப இல்ல). "அப்படியா" என்று கேட்டுக்கொள்வார். அசர மாட்டார்.
மே-22 காலை 5.50 க்கு எழும்பி, மற்றவர்களையும் எழுப்பி விட்டு, காலையிலேயே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் பிளக்ஸ் போர்டு கட்டி, நினைவஞ்சலி செலுத்தி, கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கியுள்ளார்.
அதன் பின் ம.உ.பா.மை ஏற்பாடு செய்த ZOOM மீட்டிங்கிலும் அன்று காலை பேசினார். நல்லா எதார்த்தமாக அனுபவத்தை பகிர்ந்தார்.
"என்னண்ணே... நிகழ்ச்சி எப்படி போச்சு?"
இதெல்லாம் முடிந்த பிறகு அவரிடம் செல்போனில் பேசினேன்.
"சார்... என் கேரக்டர் கிட்டத்தட்ட சங்க தலைவன் படத்தில் வர்ற கருணாஸ் கேரக்டர். என்னால செய்ய முடியாது, மத்தவங்க மாதிரி பேச முடியாது, அதுக்கு நான் சரிப்பட மாட்டேன் (சிரித்தார்), அப்படின்னு தான் நினைப்பேன். சங்கத்தமிழன் படம் பார்த்த கொஞ்ச நேரத்துல நீங்க, இணைய தள மீட்டிங்குக்கு பேச கூப்பிட்டீங்க, ஏன் நம்மளால முடியாது?, இதை ஏன் முடியாதுன்னு சொல்லணும்? முடியும், பேசுவோம்" என்று நினைத்து பேசினேன் என்றார்.
ஒரு திரைப்படமும், அதிலுள்ள கேரக்டர்களும் இப்படி ஒரு பாசிட்டிவ் அப்ரோச்சை அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஒருவரை சிந்திக்க வைக்க முடியுமா?
முடிந்திருக்கிறது.
அடுத்து அவரிடம்...
"அண்ணே... இந்த படம் பார்த்த வேகத்துல உடனே போடு கட்டணும், zoom மீட்டிங்ல பேசணும்னு தோணுது"
"ஆமா சார்"
சங்கத் தலைவன் படம் வர்றதுக்கு முன்னாடியே... ஸ்டெர்லைட் போராட்டத்துல துப்பாக்கி சூட்டிற்கு முந்தி மொத ஒரு 100 நாளும், அப்புறம்...
இப்பவரை 3 வருஷ காலமா... ஒங்க ஊருல ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுறீங்க, அது எப்படீண்ணே? பூவையா அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர் மிக முக்கியமா ஒன்றை சொன்னார்.
"அதான் சார் தெரியல (மீண்டும் சிரித்தார்)" என்றார்.
அது என்னா...ன்னா
son of soil-ம், Love with Thoothukudi-யும்தான்.
அது தான்... மண்ணின் மைந்தன் என்ற திமிரும்,
தன் தூத்துக்குடி மண்ணின் மீதுள்ள பாசமும்தான்.❤️
சங்கத்தலைவனுக்கும் பங்கிருக்கு...👍





அரிராகவன்









Sunday 23 May 2021

மூன்றாமாண்டிலும் தொடரும் தூத்துக்குடி மக்களின் கோபக் கனல்!

ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 2018 , மே 22 அன்று தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செரிந்த போராட்டத்தில் களப்பலியான தியாகிகளின் நினைவுகளை மூன்று ஆண்டுகள் கடந்த போதும் அம்மக்கள் தங்கள் நெஞ்சங்களில் சுமக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்வரை தூத்துக்குடி மக்கள் ஓயப்போவதில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் மே 22 அன்று தியாகிகளின் மூன்றாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டங்கள் தூத்துக்குடி எங்கும் நடைபெற்றது.

அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

கரோனாவைவிடக் கொடியது ஸ்டெர்லைட்

*வீட்டிலிருந்தபடியே உலகளாவிய இணையவழி தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம்*
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்களின் இயக்கம் தூத்துக்குடியில் நீதிக்காக மே 12 முதல் 22 வரைக்கும் ஒரு உலகளாவிய பட்டினி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பொதுநலனில் அக்கறையுள்ள அனைத்து மக்களையும், அமைப்புகளையும் மே 22- ஆம் தேதியை- ஸ்டெர்லைட் படுகொலையின் நினைவு நாளை- வேதாந்தா மற்றும் பெரு நிறுவன குழுமங்களின் குற்றங்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் தினமாக கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி இன்று (21-05-2021) நாங்கள் (நானும் - எனது மனைவியும் கொரானோ பாசிடிவ் மே-10 லிருந்து வீட்டிலேயே தனிமைபடுத்துதலில் இருக்கிறோம்) மதியம் மட்டும் உணவருந்தாமல் இருந்தோம்.
தமிழக அரசே!
நீர் நிலம் காற்றை நாசப்படுத்திய குற்றத்திற்காக ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர்அனில் அகர்வால், நிறுவன அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் நடவடிக்கை எடுத்திடு!
கெ.அரி ராகவன் & சத்தியபாமா
முத்தம்மாள் காலனி
தூத்துக்குடி
கரோனா பாதித்த நிலையிலும் போராட்டக் களத்தில் வழக்குரைஞர் அரிராகவன் மற்றும் அவரது இணையர்

வேலை கொடுத்தமைக்கு நன்றி! அதே நேரத்தில் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை!

தமிழக முதல்வருக்கு...
நன்றி!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தூத்துக்குடி மற்றும் 7 கோடி தமிழக மக்களின் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. ஸ்டெர்லைட் உரிமையாளர், நிர்வாகத்தின் மீது நீர், நிலம், காற்றை மாசுபடுத்திய குற்றத்திற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
3) மே-22ல் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவித்திட வேண்டும்!
நினைவிடம் அமைத்திட வேண்டும்!
4) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
5) நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்!
6) சுட்டுக்கொலை செய்த காவல்துறை/வருவாய் துறை உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்!
7) பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் வாங்ககப்பட வேண்டும்!
முதல்வர் ஸ்டாலின் (மே-21) இன்று நிறைவேற்றிய கோரிக்கைக்காக குரல் கொடுத்த, இன்னும் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கோரிக்கைகளுக்காக போராட்டம், ஆதரவு குரல் எழுப்பி வரும் அனைத்துக் கட்சிகள் (பாஜக தவிர), இயக்கங்கள், சங்கங்கள், சக தோழமை ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளுக்கும், அதன் தலைமைகளுக்கும், நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
*ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு*
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 989457481

ஆலையை மூடக்கோரி கூட்டாக அறிக்கை
பத்திரிக்கை செய்தி:
தமிழக முதல்வருக்கு கோரிக்கை:
1. ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்துப்பேசி தூத்துக்குடி ஆலையை அகற்றிக் கொள்ள வலியுறுத்த வேண்டும் (இல்லையேல்)
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அமர்வில் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்!
2. தூத்துக்குடி போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவிக்க வேண்டும்!
3. சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது!
4. தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ்பெற வேண்டும்!
5. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் "ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம்" என அறிவித்திருந்தார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. "ஸ்டெர்லைட்டை திறக்கவிட மாட்டோம்" என்ற முதல்வரின் கருத்துதான், ஒட்டுமொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்களின் கருத்து.
நச்சாலை ஸ்டெர்லைட் இனி தமிழகத்திற்கு வேண்டாம் என்பதில் தூத்துக்குடி மக்கள், தமிழக மக்கள், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கத்தினர் உறுதியாக உள்ளனர். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற வழக்குகள், அடுத்தடுத்து இடைக்கால மனுக்கள் என்று, எப்படியாவது மீண்டும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க வேண்டும் எனக்கருதி பல கோடிகள் செலவு செய்து வருகிறது. தற்போது உயிர் காக்கும் ஆக்ஸிஜன் 1050 மெட்ரிக் டன் தினமும் வழங்குகிறோம் என்று சொல்லி 10, 15 மெட்ரிக் டன்னுக்கே தடுமாறி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் புற்று நோயில் மடிந்தும், பல முறை விசவாயு கசிந்தும், 2018 மே-22 அன்று 15 பேரின் உயிரைக் குடித்த பின்பும் மீண்டும் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் முயற்சிப்பது 7 கோடித் தமிழர்கள், தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளை வெளிப்படையாக அவமதிப்பதாகும். தமிழக மக்களின் சுயமரியாதையை சீண்டுவதாகும். மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் அமைந்த வேதாந்தா தாமிர உருக்காலையை பாஜக, சிவசேனா கட்சியினரும், மக்களும் உடைத்தெறிந்தனர். அவ்வாலை மூடப்பட்டது. ஆனால் தமிழக மக்கள் சட்டம், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து 24 ஆண்டுகளாக நீதிமன்றப் படியேறி வருகின்றனர். இதைப் புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தானே ஆலையை அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தபடி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வரே பேச்சு வார்த்தை நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி விட்டால் தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும் என்றென்றும் அதற்கு நன்றியுடன் இருப்பர். திராவிட இயக்க வரலாறும் இதைப் பதிவு செய்யும். ஸ்டெர்லைட் நிர்வாகம் இதற்கு உடன்படாவிட்டால், விதிகளை மிக நீண்ட காலம் மீறி சுற்றுச் சூழலை நாசம் செய்த குற்றத்திற்காக உரிய கிரிமினல் வழக்குகள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடரப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
*ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொது அமைதி கெட்டு சுமார் 300-க்கும் மேலான வழக்குகள், பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசம், ஏராளமான மனித உயிர்கள் பலியாகி உள்ளதை கணக்கில் கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133- ன் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆலையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிடலாம்.*
தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் மட்டுமே வேதாந்தா நிறுவனத்தை பின்வாங்கச் செய்யும். உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றாலும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க முடியாது என்று கருதச் செய்யும். எனவே இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்படும் தூத்துக்குடிப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு நாளான மே-22 அன்று தமிழக முதல்வர் ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான அறிவிப்புகளைச் செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.
-----------------------------------------
சே. வாஞ்சி நாதன். வழக்கறிஞர்.
சட்ட ஆலோசகர்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
384, கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20. தொடர்பு கொள்ள:
98653 48163

நினைவஞ்சலிக் கூட்டங்கள்

தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் இன்று (மே-22) ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு பொதுமக்கள், மக்கள் கூட்டமைப்பு, கட்சிகள், இயக்கங்கள் சார்பில், செலுத்தப்பட்ட நினைவஞ்சலி புகைப்படங்கள்:


















தூத்துக்குடி எங்கும் எதிரொலித்த முழக்கங்கள்
வீரவணக்க முழக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
மண்ணை காத்த
மாவீரர்களே...
உங்களுக்கு எங்கள்
வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
மக்களைக் காத்த
தியாகிகளே...
உங்களுக்கு எங்கள்
வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
தூத்துக்குடியின் போராளிகள்
ஸ்நோலின், தமிழரசன்...
ரஞ்சித், ஜெயராமன்...
மணிராஜ், ஜான்சி...
கந்தையா
அந்தோணி செல்வராஜ்...
கார்த்திக், காளியப்பன்...
சண்முகம், கிளாஸ்டன்...
செல்வசேகர், பரத்ராஜ்...
ஜஸ்டினுக்கு வீரவணக்கம்!
விடமாட்டோம்! விடமாட்டோம்!
ஸ்டெர்லைட்டை விரட்டி அடிக்காமல்...
விடமாட்டோம்! விடமாட்டோம்!
விஷத்தை கக்கும் வேதாந்தாவை...
விரட்டி அடிக்காமல் விடமாட்டோம்!
உங்கள் கனவை நிறைவேற்றாமல்...
விடமாட்டோம்! விடமாட்டோம்!
அறிவித்திடு! அறிவித்திடு!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளை...
ரத்தம் சிந்தி உயிர்நீத்த...
எங்கள் வீட்டு செல்வங்களை
சுற்றுச்சூழல் தியாகிகளாக...
அறிவித்திடு! அறிவித்திடு!
எங்களைக் காத்த குல சாமிகளுக்கு...
எம் சந்ததியை காத்த தெய்வங்களுக்கு... நினைவுச்சின்னம் அமைத்திடு!
வழக்குப் பதிவு செய்து, கைது செய்..!
நீர், நிலம், காற்றைக் கெடுத்த
அனில் அகர்வாலை கைது செய்..!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி
வேதாந்தாவின் நிர்வாகிகளை...
கைது செய்து சிறையிலடை!
தீர்ப்பு எதுவந்தாலும்,
உச்சநிதிமன்ற தீர்ப்பு
எது வந்தாலும்...
பெருவீதத் தாமிர தொழிலை...
தமிழகத்தில் அனுமதியோம் என...
அமைச்சரவையை கூட்டி
கொள்கை முடிவெடுத்து...
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை அகற்று!
தமிழக அரசே!
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை அகற்று!
*ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு*
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817

இணைய வழிக் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 22.05.2021 அன்று காலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாமாண்டு நினைவஞ்சலி இணையவழிக் கூட்டம் நடைபெற்றது வழக்குரைஞர் மில்டன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்

நீதிபதி து.ஹரிபரந்தாமன் (ஓய்வு)* சென்னை உயர்நீதிமன்றம்
வழக்கறிஞர் திரு. பாலன்அரிதாஸ்* சென்னை உயர்நீதிமன்றம்
திரு. ஆளூர் ஷாநவாஸ் (வி.சி.க.)* சட்டமன்ற உறுப்பினர்
திரு. சுந்தராஜன்* பூவுலகில் நண்பர்கள்
திரு. செந்தில்வேல்* ஊடகவியலாளர்
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்* மாநில ஒருங்கிணைப்பாளர், PRPC
நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
மேலும், துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினர், போராட்ட முன்னணியாளர்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரான...
*திரு.பூவையா என்ற JP* தெற்கு வீரபாண்டியபுரம்
*திருமதி.ஜெனரோஸ்*
பாத்திமா நகர்
*திரு.அ. முருகன்*
குமரெட்டியாபுரம்
*திருமதி.க.வசந்தி*
பண்டாரம்பட்டி
*திரு.மணி*
பெரியநாயகிபுரம்
*திரு.சேமா சந்தணராஜ்*
முத்தையாபுரம்
*திருமதி. சிம்லா*
மடத்தூர்
*திரு.ஹான்ஸ்*
புதுத்தெரு
*சகோதரி.பியூட்லின்*
திரு நங்கை, தூத்துக்குடி
*திரு.மைக்கேல் அண்டோ ஜூனியஸ்*
ராஜபாளையம்
*திரு.A.S.முத்து*
மீளவிட்டான்த்தை நினைவு கூர்ந்தனர்.

தூத்துக்குடியில் கணன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பு ஸ்டெர்லைட்டை எரிக்காமல் அணையாது.

செய்தித் தொகுப்பு
பொன்.சேகர்

Saturday 22 May 2021

ஜக்கி: வியாபாரியா? ஆன்மீகவாதியா?

ஜக்கி விஷயத்தில் பிடிஆர்-எச்.ராஜா சர்ச்சை:

ஜக்கி வாசுதேவ் ஆன்மீகவாதி அல்ல; அவர் ஒரு வியாபாரி என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.

நன்றி: Arakalagam tv

Thursday 20 May 2021

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!

பத்திரிக்கைச் செய்தி:

தமிழக முதல்வருக்குக் கோரிக்கை:

1. ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்துப்பேசி  தூத்துக்குடி ஆலையை  அகற்றிக் கொள்ள வலியுறுத்த வேண்டும்  (இல்லையேல்) 

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட  உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அமர்வில் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்! 

2. தூத்துக்குடி போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவிக்க வேண்டும்!

3. சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளுக்கு  முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது!

4. தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்!

5. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் "ஸ்டெர்லைட் ஆலையை  ஒருபோதும் திறக்க மாட்டோம்" என அறிவித்திருந்தார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. "ஸ்டெர்லைட்டை திறக்கவிட மாட்டோம்"  என்ற முதல்வரின் கருத்துதான், ஒட்டுமொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்களின் கருத்து.

நச்சாலை ஸ்டெர்லைட்  இனி தமிழகத்திற்கு வேண்டாம் என்பதில்  தூத்துக்குடி மக்கள், தமிழக மக்கள், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கத்தினர் உறுதியாக உள்ளனர். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம்,  வேதாளம் மீண்டும்  முருங்கை மரம் ஏறிய கதையாக, பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற வழக்குகள், அடுத்தடுத்து இடைக்கால மனுக்கள் என்று,  எப்படியாவது மீண்டும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க வேண்டும் எனக்கருதி பல கோடிகள் செலவு செய்து  வருகிறது. தற்போது உயிர் காக்கும் ஆக்ஸிஜன்  1050 மெட்ரிக் டன் தினமும் வழங்குகிறோம் என்று சொல்லி 10, 15 மெட்ரிக் டன்னுக்கே தடுமாறி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் புற்று நோயில் மடிந்தும், பல முறை விசவாயு கசிந்தும், 2018 மே-22 அன்று 15 பேரின் உயிரைக் குடித்த பின்பும் மீண்டும் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் முயற்சிப்பது 7 கோடித் தமிழர்கள், தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளை  வெளிப்படையாக அவமதிப்பதாகும். தமிழக மக்களின் சுயமரியாதையை சீண்டுவதாகும். மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் அமைந்த வேதாந்தா தாமிர உருக்காலையை பாஜக, சிவசேனா கட்சியினரும், மக்களும் உடைத்தெறிந்தனர். அவ்வாலை மூடப்பட்டது. ஆனால் தமிழக மக்கள் சட்டம், ஜனநாயகத்தில்  நம்பிக்கை வைத்து 24 ஆண்டுகளாக நீதிமன்றப் படியேறி வருகின்றனர். இதைப் புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தானே ஆலையை அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தபடி  இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வரே பேச்சு வார்த்தை நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி விட்டால் தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும் என்றென்றும் அதற்கு நன்றியுடன் இருப்பர். திராவிட இயக்க வரலாறும் இதைப் பதிவு செய்யும். ஸ்டெர்லைட் நிர்வாகம் இதற்கு உடன்படாவிட்டால், விதிகளை மிக நீண்ட காலம் மீறி சுற்றுச் சூழலை நாசம் செய்த குற்றத்திற்காக உரிய கிரிமினல் வழக்குகள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடரப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொது அமைதி கெட்டு சுமார் 300-க்கும் மேலான வழக்குகள், பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசம், ஏராளமான மனித உயிர்கள் பலியாகி உள்ளதை கணக்கில் கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133-ன் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆலையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிடலாம்.

தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் மட்டுமே வேதாந்தா நிறுவனத்தை பின்வாங்கச் செய்யும். உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றாலும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க முடியாது என்று கருதச் செய்யும். எனவே  இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்படும் தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு நாளான மே-22 அன்று தமிழக முதல்வர் ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான அறிவிப்புகளைச்  செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

-----------------------------------------

சே. வாஞ்சி நாதன், வழக்குரைஞர்
சட்ட ஆலோசகர், 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

மாநில  ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

384, கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20.  

தொடர்பு கொள்ள: 98653 48163