Tuesday 29 December 2020

பா.ஜ.க குறித்து அதிமுக தலைவர்களின் தேர்தல் அரசியல் நாடகம்!

பா.ஐ.க பற்றி அதிமுக தலைவர்களின் நாடகம்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி‌ பாருங்கள்! பரப்புங்கள்!

 நன்றி: arakalagam tv


Monday 21 December 2020

விவசாயிகளுக்கு ஆதரவாகத் திருவண்ணாமலை வழக்குரைஞர்கள் போராட்டம்!

இந்திய விவசாயிகளை பாதிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி திருவண்ணாமலை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!





Sunday 20 December 2020

ஸ்டெர்லைட் போராட்டம்: பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

"ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரி" என உச்சநீதிமன்றம் வரை வாதாடும் தமிழக அரசு, ஸ்டெர்லைட்டை மூடுவதற்காகப் போராடிய ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது கடந்த இரண்டரை ஆண்டுகளாக போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாமல் பழி வாங்குவது ஏன்?

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் துண்டறிக்கைகளை ஸ்ரீவைகுண்டத்தில் கொடுத்ததாக பண்டாரம் பட்டியைச் சேர்ந்த சந்தோசை காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்ததைக் கண்டித்து சந்தோசை விடுவிக்கக்கோரி 17-01-2019 அன்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் அதில் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு சிப்காட் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் கழித்து 10 நபர்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 10 பேரில் ஒருவர் பண்டாரம்பட்டி வசந்தி அம்மா அவர்களின் கொழுந்தனார் பிரபாகரன் ஆவார். அவர் மாரடைப்பால் சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையின்பேரில் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

அதனால் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் (JM3) நாங்கள் அனைவரும் ஆஜரானோம். இந்த வழக்கு வரும் 04-01-2021 வாய்தா போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில் கடந்த 12-02-2018, 13-02-2018 ஆகிய நாட்களில் தூத்துக்குடி சிதம்பர நகர் அருகில் குழந்தைகள் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டை மூடப் போராட்டம் நடத்தியதற்காக ஒரு வழக்கும், அந்தப் போராட்டத்தில் "ஸ்டெர்லைட்டை மூடு" என்ற வாசகம் அடங்கிய பேனர் இருந்ததற்காக  இரண்டாவது வழக்கும், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியாளர்கள் மீது மூன்றாவது வழக்கும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் மீதும், மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலர் மீதும் குமரெட்டியாபுரம் வேப்ப மரத்துக்கடியில் உட்கார்ந்து இருந்ததற்காக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேப்ப மரத்துக்கடியில் யார் யார் உட்கார்ந்து இருந்தார்கள்? என்று விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசின் *சிபிசிஐடி* போலீஸ் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அந்த வழக்கில் வரும் 23-12-2020 அன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணையும் தற்போது வந்துள்ளது.

(மே 22-23 ல் நடந்த போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவது தனிக்கதை)

ஸ்டெர்லைட்டை மூட களத்தில் நின்ற, ஆதரவு தெரிவித்த கட்சிகள், அமைப்புகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்ய கோரிக்கை வைக்கவும்,

தமிழக அரசும் இரத்து செய்ய முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

Thursday 17 December 2020

வேளாண் சட்டங்கள்: சொரணை அற்றவர்கள் சொரணை உள்ளவர்களை உரசிப் பார்க்கிறார்கள்!

 வேளாண் சட்டங்கள் 

  1. விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம் என்று சொல்லக்கூடிய விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்.

  2. ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் என்று சொல்லக்கூடிய விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.

  3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.


மேற்கண்ட மூன்று சட்டங்களும் கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டு 05.05.2020 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.


இவை விவசாயிகளுக்கு எதிரானவை மட்டுமல்ல மாநில உரிமைகளையும் பறிக்கக் கூடியவை என்பதனால் பஞ்சாப் சட்டசபையில் ஆகஸ்டு 28 அன்று இச்சட்டங்களை ஏற்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹரியானாவிலும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


விவசாயிகளிடம் இருந்து முப்பது ரூபாய்க்கு வாங்கப்படும் ஆப்பிள் நம்மிடம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவரை இடைத்தரகர்கள் கொள்ளையடித்த அந்த 70 ரூபாயும் விவசாயிகளுக்கு சென்றடையும்; அதேபோல மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் மிளகாய்பொடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியும் என்றும், காஷ்மீரில் இருக்கின்ற விவசாயி நேரடியாக தமிழகத்திலும், தமிழகத்தில் உள்ள விவசாய நேரடியாக காஷ்மீரிலும் இணையவழி மூலம் தங்களுடைய உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியுமென்றும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் இந்தச் சட்டங்களை ஆதரிப்போர் பேசி வருகின்றனர். இவையெல்லாம் உண்மையா என்பதை அந்தச் சட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டால்தான் புரிந்து கொள்ள முடியும். 


முதல் இரண்டு சட்டங்களும் மாநில உரிமைகளைப் பறிக்கக்கூடியவை. வேளாண்மை, நிலம், சந்தை, விவசாய வருமானத்தின் மீதான வரிகள், நிலம் தொடர்பான வரிகள், நிலத்தின் மீதான உரிமைகள் இவை அனைத்தும் இந்திய அரசியல் சட்டம் அட்டவணை 7 ன் கீழ் பட்டியல் 2 அதாவது மாநிலப் பட்டியலில் (14, 18, 28, 46, 47, 48, 49) வரக்கூடியவை.  மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக் கொண்டு விட்டது. இதன் மூலம் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை இழந்தது மட்டுமல்ல கணிசமான வருவாயையும் இழக்க வேண்டி வரும். இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எடப்பாடி அரசு இந்தச் சட்டங்களை வரவேற்கிறது.


விலை பொருள் ஊக்குவிப்புச் சட்டம்


காஷ்மீர் ஆப்பிளை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கும் தமிழக அரிசியை காஷ்மீரில் விற்பனை செய்வதற்கும் ஏற்கனவே சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்தது போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கி இனி மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலும் இணைய வழி மூலமாக வர்த்தகம் செய்வதற்கு சுதந்திரம் அளிக்கப்படுவதாக இந்தச் சட்டம் சொல்கிறது. வர்த்தகம் முடிந்த அன்றோ அல்லது மூன்று நாட்களுக்குள்ளோ பொருளுக்கான தொகையை செலுத்தி விட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் எந்த ஒரு தனிநபரும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட முடியாது (பிரிவு:5). கூட்டுறவு அமைப்புகள் மூலம்தான் இணையவழி வர்த்தகத்தைச் செய்ய முடியும். இந்த கூட்டுறவு அமைப்புகளை யார் உருவாக்குவார்கள், அதிகாரம் யார் கையில் இருக்கும் என்பது குறித்து எந்த விளக்கமும் சட்டத்தில் இல்லை. 


பொருளை விற்ற விவசாயிக்கும் பொருளை வாங்கிய வியாபாரிக்கும் வர்த்தகத்தில் பிரச்சினை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர் வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி ஆட்சியர் பொறுப்பிலுள்ள அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தால் அவர் ஒரு சமரசக் குழுவை ஏற்படுத்துவார். அதில் அவரோ அல்லது அவரால் நியமிக்கப்படும் ஒரு அரசு அதிகாரியோ தலைவராக இருப்பார்.  இருதரப்பிலிருந்தும் ஒருவரோ அல்லது இருவரோ அந்தக் குழுவில் இடம் பெறலாம். குறைந்தபட்சம் இரண்டு பேர் அதிகபட்சம் நான்கு பேர் இடம் பெறலாம். இந்த ஏற்பாட்டை 7 நாட்களுக்குள் அந்த அதிகாரி செய்து முடிக்க வேண்டும். அதன்பிறகு இரு தரப்பையும் விசாரித்து 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்குப் பணம் செலுத்தவோ அல்லது அபராதம் செலுத்தவோ அல்லது வர்த்தகத்தை தடை செய்தோ உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவர் அதன்மீதான உத்தரவை 30 நாட்களுக்குள் பிறப்பிக்க வேண்டும். 90 நாட்கள் வரைகூட மேல்முறையீடு செய்ய இச்சட்டம் அனுமதிக்கிறது. (பிரிவு:8). அதிகாரிகள் பிறப்பிக்கும் இந்த உத்தரவுகள் உரிமையியல் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்குச் சமமானது. 


ஒரு கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதே ஒரு விவசாயிக்கு குதிரைக்கொம்பாக இருக்கும்பொழுது தான் விற்ற பொருளுக்கு பணம் கிடைக்கவில்லை என்று கோட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியுமா? அல்லது அந்த விசாரணைக் குழுவில் தனது வாதங்களை முன்வைத்து வாதிட முடியுமா? இணையவழி வர்த்தகத்தை ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. விற்ற பொருளுக்கான பணம் கைக்கு வராதது மட்டுமல்ல, இதற்கான செலவுகளும் கூடுதலாக விவசாயி தலையில்தான் விழும். 


இதுகுறித்த முழு அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு (பிரிவு:12), மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க முடியாது (பிரிவு:13), விவசாய உற்பத்தி சந்தை குழு (APMC-Agriculture Produce Market Committee) உள்ளிட்ட மாநில அரசின் சட்டங்கள் அனைத்திற்கும் மேலானது இந்த சட்டம் (பிரிவு:14), உரிமையியல் நீதிமன்றங்கள் தலையிட முடியாது (பிரிவு:15) என மாநில அரசு, நீதிமன்றங்கள், வழக்குரைஞர்கள் என அனைவரின் உரிமைகளையும் பறித்து விட்டது இந்தச் சட்டம்.


இணையவழி விற்பனையை ஊக்குவிப்பதன் மூலம் விளை பொருட்களை கொள்முதல் செய்யும் கடமையை அரசு கைவிடுகிறது. வேளாண்மை விளைபொருள் விற்பனை கூடங்கள் இனி இருக்காது. வேண்டிய மட்டும் கார்ப்பரேட் முதலாளிகள் விளைபொருட்களை வாங்கிக் குவித்துக் கொள்வார்கள். இணையவழியில் யாரும் வாங்க முன்வரவில்லை என்றால் விளைந்த பொருளை தனியாரிடம் அடிமாட்டு விலைக்குதான் விவசாயி விற்க வேண்டும். அதற்கும் வழி இல்லை என்றால் சாலையில்தான் கொட்டவேண்டும். 


கொள்முதலை அரசு கைவிடுவதால் இனி தானியக் கிடங்குகள் இருக்காது. தானியக் கிடங்குகள் இல்லை என்றால் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் கிடைக்காது. கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து கூடுதல் பணம் கொடுத்து அரசு நியாயவிலைக் கடைகளை நடத்த முன் வருவதற்கான வாய்ப்பே கிடையாது. நியாயவிலைக் கடைகளை நம்பி உயிர் வாழும் 76 கோடி மக்களின் உயிர்வாழும் உரிமையை இந்த சட்டம் பறித்து விடுகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள உயிர்வாழும் உரிமைக்கு எதிரானது இந்தச் சட்டம். 


ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம்


பணக்கார விவசாயிகள் அல்லது பண்ணையார்கள் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். சிறு குறு விவசாயிகள் அப்படி செய்வது நடைமுறை சாத்தியமில்லை. அவர்கள் ஒரு சிலர் சேர்ந்து சங்கமானால் மட்டுமே ஒப்பந்தம் சாத்தியமாகும். அப்படிச் சங்கமாகும் போது அவர்களது சங்கம் பதிவு செய்யப் வேண்டும் என்கிறது சட்டம் (பிரிவு: 2). ஒருமுறை பதிவு செய்வதற்கான கட்டணம் அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதைப் புதுப்பிப்பதற்கான கட்டணம். இது ஒரு தனி செலவு அலைச்சல்.


விலை பொருளின் தரம், எப்பொழுது தர வேண்டும், விலை என்ன என்பதை எல்லாம் முன்கூட்டியே ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும் (பிரிவு:2-g, 3). விளைபொருளின் தரத்தை முன்கூட்டியே தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன? விலையைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன? என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் சட்டத்தில் இல்லை. ஒரு விளை பொருளின் தரம் விதையின் தன்மை, மண்ணின் தன்மை, நீர், உரம், பூச்சி மருந்து, வறட்சி வெள்ளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மாறுபடும். அப்படி இருக்க முன்கூட்டியே தரத்தைத் தீர்மானிப்பது இறுதியில் விவசாயிக்குத்தான் பிரச்சனையை ஏற்படுத்தும். 


ஒப்பந்தப்படி வேளாண்மை நடைபெறுகிறதா என்பதை இடையில் ஒரு மூன்றாம் நபரை வைத்துச் சான்றிதழ் பெற வேண்டும் (பிரிவு: 4). இதற்கான செலவு யார் தலையில் விழும்?


விளை பொருளைத் தரும்பொழுது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் மாற்றம் ஏற்பட்டால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி தொகையைக் கொடுக்க வேண்டும்.  வெளிச் சந்தையில் கூடுதல் விலை போகும் பட்சத்தில் அந்த கூடுதல் தொகையை தீர்மானிப்பதற்கான அளவுகோலாக அரசின் குறைந்த பட்ச ஆதார விலை அல்லது இணையவழி சந்தையில் விலை நிலவரம் ஆகியவற்றை வைத்து தீர்மானிக்க வேண்டும் என்கிறது சட்டம் (பிரிவு: 5). அவ்வளவு சுலபமாக ஒப்பந்தம் போட்ட முதலாளிகள் கொடுத்து விடுவார்களா என்ன? இந்தப் பஞ்சாயத்தை யார் தீர்ப்பது? கடைசியில் நட்டம் என்னவோ விவசாயிக்குதான்.


விளைபொருளை விளைந்த இடத்திலேயே வந்து ஒப்பந்தம் செய்து கொண்டவர் சோதனை செய்த பிறகு  எடுத்துச் செல்ல வேண்டும். விதைக்கான ஒப்பந்தம் என்றால் பொருளை பெற்றுக் கொண்டவுடன் மூன்றில் இரண்டு பங்குத் தொகையை உடனே செலுத்தி விட வேண்டும். மீதித் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மற்ற விளை பொருட்களுக்கு பொருளைப் பெற்றுக் கொண்ட உடனேயே முழுத் தொகையையும் செலுத்தி விட வேண்டும் (பிரிவு: 6). ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி தரம் இல்லை என்று சொல்லி பொருளை எடுத்துச் செல்லவோ அல்லது பணத்தைத் தர மறுக்கவோ அல்லது பணத்தை தர தாமதிக்கவோ எல்லா சாத்தியக்கூறுகளும் உண்டு. இந்தச் சூழல் ஏற்பட்டால் நட்டம் என்னவோ மீண்டும் விவசாயிக்குத்தான். 


ஒப்பந்த விவசாயத்தில் வாங்கும் விளைபொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வியாபாரிகள் இருப்பு வைத்துக்கொள்ள முடியும். அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்புச்சட்டம் இங்கே செல்லுபடியாகாது (பிரிவு: 7). இந்தச் சட்டப்பிரிவு நேரடியான பதுக்கலுக்கு வழிகோலுகிறது.


தரம், விலை உள்ளிட்டவைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடைமுறை விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டத்தில் உள்ளது போலவே வருவாய் கோட்டாட்சியரிடம் மனு, விசாரணைக் குழு, 30 நாட்களுக்குள் உத்தரவு, மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு-30 நாட்களுக்குள் உத்தரவு, உத்தரவுகள் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது ( பிரிவு: 14), உரிமையில் நீதிமன்றத்தில் வழக்குகள் போட முடியாது (பிரிவு:18,19), மாநிலச் சட்டங்கள் செல்லாது (பிரிவு:20) உள்ளிட்ட அம்சங்கள் இதிலும் உள்ளன.


அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்


சட்டத்தின் அட்டவணையில் மொத்தம் 7 வகையான பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என  சட்டம் குறிப்பிடுகிறது. அதில் மாற்றம் செய்து தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை இனி அத்தியாவசியப் பொருள்கள் கிடையாது என்று  1(A) என்ற சட்டப்பிரிவை பிரிவு 3 ல் சொருகி உள்ளது மோடி அரசு. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை கார்ப்பரேட் முதலாளிகள் பதுக்கி வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது இச்சட்டத் திருத்தம். கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் கருப்புச் சந்தைக்கு மட்டுமே இச்சட்டத் திருத்தம் பயன்படப் போகிறது. வெங்காயம் திங்காத சொரணையற்றவர்கள் நம்மை உரசிப் பார்க்கிறார்கள். 


இனி இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள்.  காவிகளே கார்ப்பரேட்டுகளுக்கு முழுத் தரகர்களாக மாறிய பிறகு இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? பத்து ரூபாய்க்கு உருளைக்கிழங்கை வாங்கி இருநூறு ரூபாய்க்கு விற்பனை செய்து கோடி கோடியாய் கொள்ளை அடிப்பார்கள்‌. 


இரயில், விமானம், வங்கி, உற்பத்தி, காப்பீடு என பல்வேறு துறைகளில் சுய சார்பாய் இருந்த நம்மை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைத்தார்கள்.  எஞ்சி நிற்கும் விவசாயிகளை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? 


இது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல உணவு உட்கொள்ளும் அனைவரின் பிரச்சனை. உயிர் வாழும் உரிமை பற்றிய பிரச்சனை. இனி வாழ்வா? சாவா? முடிவு செய்!


பொன்.சேகர்

வழக்குரைஞர்


Wednesday 16 December 2020

வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி போராட்டக் களத்தில் வழக்குரைஞர்கள்!

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள்! - JAAC

4/12/2020  நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பங்கேற்பார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்கள் கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டம் இணையம் வழியாக கடந்த 12.12.2020 அன்று நடைபெற்றது. 

கூட்டத்தின் முடிவில் 14.12.2020 அன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுடன் நமது வழக்கறிஞர் சங்கங்கள் பதாகைகளுடன் கலந்துகொண்டு ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இவண்
JAAC

காட்பாடி

08.12.2020 அன்று வழக்கறிஞர் பாலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

டெல்லி

29.11.2020 அன்று..

போராடும் விவசாயிகளை ஆதரித்து
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

"போராடும் விவசாயிகள் எளிமையானவர்கள். நாங்கள் பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள்!

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் போராடுவதற்கு உரிமை உண்டு.

மூன்று வேளாண் சட்டங்களும் அமுல்படுத்தினால் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் விளைநிலங்கள் சென்றுவிடும்! நாங்கள் போராடும் விவசாயிகளுடன் நிற்போம்!"

****

SC lawyers show solidarity with protesting farmers

New Delhi [India], November 29 (ANI): Several lawyers led by Bar Council of Delhi member Rajiv Khosla and senior advocate HS Phoolka gathered outside the Supreme Court in Delhi on Sunday to show solidarity with farmers protesting against the recently passed farm laws and condemn the action taken by the Haryana government.

"Supreme court lawyers have gathered here to stand in solidarity with the agitating farmers. Each and every citizen of the country has the right to protest. It is extremely irresponsible to level allegations against the farmers by saying that they are from this or that political party. They are simple farmers, many of whom are from my own village. What the Haryana government did to the farmers was very wrong. The government should heed the demands of the farmers," Phoolka said.

This comes amid the massive Delhi Chalo march taking place in and around the national capital by farmers, mostly from Punjab and Haryana, demanding that the three Centre's farm bills be taken back.
Over the last few days, farmers have been met with tear gas shells, water cannons, lathi charges and blockades by the Haryana Police at the Punjab-Haryana border to stop them from reaching Delhi.

While speaking to ANI, Rajiv Khosla alleged that this was a ploy by the government to ruin the justice system, and that a meeting would be held by the Bar Council on December 4 to discuss the matter.

"This is a 'chaal' (ploy) by the government to ruin the justice system. The government has given power to ADMs and SDMs who are their puppets. They will only give justice to those the government wants to give justice to. Land will go into the hands of powerful people. Our first priority is to help and give justice to those who don't have it," he said.

He added, "Potatoes, onions and tomatoes have been removed from the essential commodities list. Do you want the common man to die? They will have to buy onions for Rs 200 per kg. We will not let this happen. The Bar Council will hold a meeting on December 4 where we may decide to hold an all-India agitation."

Earlier in September, Khosla had written a letter to Prime Minister Narendra Modi regarding the jurisdiction of Civil Courts, which had been ousted from the new farm bill and said that the bill is more detrimental to lawyers and litigants.
Meanwhile, farmers held a meeting earlier in the day at the Singhu (Delhi-Haryana) border to discuss the plan regarding the protest. This is a key meeting since farmers are yet to decide on whether they will move to Burari after a request from the Centre.

In a bid to allay fears of farmers, Prime Minister Narendra Modi in his monthly radio programme 'Mann Ki Baat' earlier today said that the agricultural reforms had opened the doors of new opportunities for farmers and gave them more rights.
"Recent agri-reforms have opened the doors of new opportunities for farmers. Decades-old demands of farmers which were promised by many political parties have now been met. 

Parliament has recently passed farm reform laws after rigorous brainstorming. These reforms have not only broken shackles of farmers but have also given new rights and opportunities to them," the PM said.

The Farmer's Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020 and the Farmers (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services Bill, 2020 were passed by the Upper House in September through voice vote despite objection from opposition parties. (ANI)

http://businessworld.in/article/SC-lawyers-show-solidarity-with-protesting-farmers/29-11-2020-348002



திருச்சி

05.12.2020 அன்று

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறு!

- வழக்கறிஞர்கள், திருச்சி

அகில இந்திய விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை ஆதரித்து திருச்சி வழக்கறிஞர்கள் 05.12.2020ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் டெல்லி முற்றுகையை ஆதரித்து திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மதுரை

08.12.2020

"புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறு!"

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மக்கள் விரோத சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பபெற கோரியும் இன்று மதுரை உயர்நீதிமன்றகிளை முன்பு  வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.




சென்னை

08.12.2020 அன்று உயர் நீதிமன்றத்தில்

“ஆதரிப்போம்! ஆதரிப்போம்!
விவசாயிகள் போராட்டத்தை
நாடுதழுவிய முழுஅடைப்பை
ஆதரிப்போம் ஆதரிப்போம்

விவசாயிகள் கைகளிலிருந்து
விவசாயத்தை பறிக்கின்ற
அம்பானியும் அதானியும்
விவசாயத்தை கொள்ளையடிக்க
அதிகாரம் வழங்குவதே
மோடிஅரசின் வேளாண் - சட்டம்

கார்பரேட்டுகள் கொள்ளையை
வேளாண்மை சட்டமென்று
நரியை பரியாக்கும்
மோடிஅரசின் முகமூடியை
கிழித்தெறிந்து போராடும்
தலைநகர முற்றுகையிடும்
போராட்டம் வெல்லட்டும்

விவசாயிகள் போராட்டத்தில்
இன்னுயிர் ஈந்ததீரர்களே
விவசாய தோழர்களே
வீரவணக்கம் வீரவணக்கம்
உங்களுக்கெங்கள் வீரவணக்கம்
எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம்
பஞ்சாப் உழவன் சிந்தியரத்தம்
எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம்

விவசாயிகளுக்கு ஆதரவாக
தொழிலாளர் மாணவர்கள்
எழுத்தாளர்கள் பொதுமக்கள்
ஓரணயில் திரண்டபோதும்
கார்ப்பரேட்டின் அடியாளான
மோடியின் எருமைத்தோலுக்கு

உறைக்கவில்லை உறைக்கவில்லை
உணவுப்பொருளை விதைக்கவிடாமல்
அவுரியை பயிர்செய்ய
ஆணையிட்ட பிரிட்டிஷின்
காலனிமதிலை தகர்த்தகாற்று
உழவன்என்னும் புயற்காற்று
கார்ப்பரேட்டின் அடியாளான
மோடிக்கு தலைவணங்காது

வெள்ளைஎதிர்ப்பு போராட்டத்தை
காட்டிக்கொடுத்த காவிக்கும்பல்
தூக்குத்தண்டனை கொடுத்தபோதும்
புன்னகையுடன் எதிர்கொண்ட
பகத்சிங்கின் மண்ணில் பிறந்த
விவசாயிகளிடம் தோற்பது உறுதி

கார்ப்பரேட்டுகள் கைகளிலிருந்து
இந்தியாவின் விவசாயத்தை
இந்தியாவின் இறையாண்மை
காப்பதற்காக போராடும்
விவசாயிகள் போராட்டத்தை
2ம் சுதந்திர போராட்டத்தை
ஆதரிப்போம் ஆதரிப்போம்”.

காட்பாடி

08.12.2020 அன்று

"புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறு!"

காட்பாடி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நாகர்கோவில்

14.12.2020 அன்று

விவசாயிகளுக்கு ஆதரவாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து BSNL அலுவலகம் முன்பு நாகர்கோவில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!


திருச்சி

14.12.2020 அன்று

விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்! 

- திருச்சி வழக்கறிஞர்கள்

இன்று திருச்சியில் நடந்த காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து...திருச்சி வழக்கறிஞர்கள் களத்தில்!



Monday 7 December 2020

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது! என்ன செய்யப் போகிறோம்?

குடியுரிமை திருத்தச் சட்டம் வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்கள். என்ன செய்யப்போகிறோம்?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களுடன் நேர்காணல்.



நன்றி: Liberty tamil

நாடக அரசியல் நடத்துகிறாரா பாமக ராமதாஸ்?

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக ராமதாஸ் நடத்திய நாடக அரசியல் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களுடன் ஒரு நேர்காணல். 



நன்றி: Liberty tamil

Sunday 6 December 2020

வேளாண் திருத்தச் சட்டங்கள் சரியா? தவறா?

வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி.

நன்றி: Arakalagam tv



Saturday 5 December 2020

ரஜினியின் வாடகை பாக்கியும் ஊழல் ஒழிப்பும்!

ரஜினியின் அரசியல் வருகை குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி.


நன்றி: அறக்கலகம் 

Wednesday 25 November 2020

உதயமானது "நிவர்" நிவாரணக் குழு!

நண்பர்களே,

"நிவர் புயல்" - பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று  ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே கொரானா மீட்பு பணியில் ஈடுபட்ட  சென்னை மக்கள் உதவிக்குழு, வடசென்னை மக்கள் உதவிக்குழு, வியாசை தோழர்கள் உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதற்கட்டமாக நமது தோழர்கள் வசிக்கும் பகுதிகள் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவது என்றும் குறிப்பாக வியாசை மற்றும் வடசென்னை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இதை ஒருங்கிணைக்கும் வகையில் 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

PS, NN, Sarath ஒருங்கிணைக்க பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளனர். 

*உடனடியாக திட்டமிட்ட வேலைகள்*

1. அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது,

2.அத்தியாவசியமான நிவாரண உதவிகளை வழங்குவது

3.  உதவி எண்கள் அறிவிப்பது

4. உதவிப்பணிகளுக்கு  நிதி திரட்டுவது

5. நாளை காலை 9 மணிக்கு கள ஆய்வு செய்வது, 

என்ற வகையில் தற்போது திட்டமிட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

நிலைமைகளையொட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை


பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்!" சேர்ப்பா?

அருந்ததி ராய் புத்தகம் மீண்டும் பாட திட்டத்தில் சேர்ப்பா? மனோன்மனியம் பல்கலை. துணை வேந்தர் விளக்கம்

#குறிப்பு : அருந்ததிராய் புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் இணைத்ததாக வந்த தகவல்களை ஒட்டி, நாம் ஒரு பதிவை இன்று காலையில் வெளியிட்டோம். இப்பொழுது பிபிசியில் (ஒரு மணி நேரத்திற்கு முன்பு) வந்த செய்தி துணைவேந்தர் மறுத்து சொன்ன செய்தி வெளியாகியிருக்கிறது. 

ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நமது போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் மக்களிடம் கொண்டு செல்வோம்.

****

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் 'Walking With The Comrades' புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயின் புத்தகம் கடந்த 11-ம் தேதி பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அந்தப் புத்தகம் மாணவர்களிடையே தவறான கருத்துகளைப் பரப்புகிறது என்பதால் அதை நீக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அந்த அமைப்பின் அழுத்தம் காரணமாகவே புத்தகம் பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். ஆனால் அந்த கருத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி மறுப்பு தெரிவித்திருந்தார். மாணவர்கள் நலன் கருதியே புத்தகம் நீக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வாரம் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர், சில மாணவர்களை மட்டும் துணைவேந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் சில மாணவர்கள் மட்டும் துணைவேந்தரைச் சந்தித்தனர். அப்போது நீக்கப்பட்ட புத்தகத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி கடந்த வாரத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் துணைவேந்தரைச் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் 'Walking With The Comrades' புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. சில தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி ஒளிபரப்பாயின.

அந்த செய்தியைப் பார்த்த அருந்ததி ராய் நன்றி தெரிவிப்பதாகக் கூறும் அறிக்கையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இந்த அறிக்கை தொடர்பாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்ட போது 'கடந்த 23-ம் தேதி நடந்த பாடத்திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல்களுக்குப் பின்னரே எங்கள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது' என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் முடிவு அருந்ததிராயின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னரும் அது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் எங்கள் அமைப்பின் அறிக்கைக்கோ, அருந்ததி ராயின் அறிக்கைக்கோ துணைவேந்தர் இன்னும் மறுப்பு தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே பாடத்திட்டத் தேர்வுக் குழுவின் முடிவைப் பற்றி துணைவேந்தர் வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்' என்று ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்ட போது இது தொடர்பாக தற்போது வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று கூறினார். பாட திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது இது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது தொடர்பான கோரிக்கை இன்னும் பரிசீலனை அளவிலேயே உள்ளது என்றும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

- BBC NEWS

https://www.bbc.com/tamil/india-55074700

முன்பு வெளியான தகவல்

பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’: அருந்ததிராய் நன்றி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் நூல் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கை: 

“திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற எனது நூலை மீண்டும்  அதன் பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். 

தனிநபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த பொது விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. அறிவுபூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சிக்கின்றன.

புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கும், அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக்கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். "

-அருந்ததி ராய்

நன்றி: Gunaa Gunasekaran


Monday 16 November 2020

ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில்  விசாரணை:

ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

அதை  தொடர்ந்து ஸ்டெர்லைட்  நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று 16.11.2020 நீதிபதிகள் நவீன் சின்ஹா  மற்றும் கே.எம். ஜோசஃப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக  மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி  மற்றும்  முகுல் ரோதங்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். 

அதில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஸ்டெர்லைட் ஆலை மீறியதாக கூறப்பட்ட பல விதிமீறல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டன. இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆலையைத் திறக்க அனுமதி கொடுத்தால் அனைத்து நிபந்தனைகளும் சரி செய்யப்படும் என்றும்,  பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் எனவும்,  இந்திய காப்பர் உற்பத்தியை கணக்கில் எடுத்துகொண்டு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்;அதற்கேற்ற பொருத்தமான வடிவில் குறைந்த பக்க அளவில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக வாதிட்டார். மேலும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தங்கி, விசாரணை ஆணையம் அமைத்துதான் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு எதிராக அரசு தரப்பு சார்பாக மூத்த  வழக்கறிஞர்கள் சி.எஸ் . வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் காலின் கொன்சால்வேஸ், வழக்கறிஞர் சபரீஷ் ஆகியோர் ஆஜராகி ஸ்டெர்லைட்  நிறுவனத்தின் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, சுற்றுப்புறச்சூழலை மாசு படுத்தியதால் தமிழக அரசு நிரந்தரமாக அந்த ஆலையை மூடியது, பின்னர் விரிவான விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம்  ஆலையை நிரந்தமாக மூடியதை ஏற்று  இறுதித் தீர்ப்பு வழங்கியது என்று வாதிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை என்று அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யட்டும், இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே இடைக்கால தீர்ப்பு தேவையா என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்து, டிசம்பர் மாதம் முதல்வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

- சு . ஜிம்ராஜ்  மில்ட்டன்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday 11 November 2020

குரங்கு சேனா ஸ்ரீதர் படுத்தே விட்டானடா|

தொல்.திருமாவளவனுக்கு எதிராக உதார்விட்ட குரங்கு சேனாவைச் சேர்ந்த ஸ்ரீதர் உள்ளிட்ட சங்கிகளைத் தோலுரிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்!பகிருங்கள்!

நன்றி: அறக்கலகம்

Tuesday 10 November 2020

திருமாவளவன் மீதான வழக்குத் தள்ளுபடி - பாஜகவுக்குப் பின்னடைவா?

 திருமாவளவன் மீதான வழக்கு தள்ளுபடி - பாஜகவுக்கு பின்னடைவா?

வழக்குப் போட்டவர் மீது வழக்கு போடணும்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு

நன்றி: லிபர்ட்டி



Wednesday 4 November 2020

கேரள மாவோயிஸ்ட் வேல்முருகன் படுகொலை! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கடும் கண்டனம்!

 04.11.2020

பத்திரிகைச் செய்தி

கேரளாவில் மாவோயிஸ்ட் தோழர் வேல்முருகன் போலி மோதலில் சுட்டுப் படுகொலை

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் பினராயி விஜயன் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த 33 வயது மாவோயிஸ்ட் இளைஞர் வேல்முருகன் நவம்பர் 3 செவ்வாய்க்கிழமை காலை கேரள அதிரடிப்படை போலீசாரால் போலி மோதலில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை வயநாடு காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்களாம். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களாம். தற்காப்புக்காகப் போலீசார் திருப்பிச் சுட்டதில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சார்ந்த வேல்முருகன் இறந்துவிட்டாராம். போலி மோதல் படுகொலைகளை நியாயப்படுத்தும் வழக்கமானப் புனை கதையைத்தான் பினராய் விஜயன் அரசும் சொல்லிக் கொண்டிருக்கிறது..

கேரளாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், இது சட்டவிரோதப் போலி மோதல் படுகொலை என்றும், இது குறித்து நீதி விசாரணை தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மோதல் நடந்த இடத்திற்குச் செல்ல ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அனுமதி மறுத்து வருவதோடு குற்றத்தை மறைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் பினராய் விஜயன் அரசு முயற்சி செய்வதாக மனித உரிமை சபை எனும் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் நிர்மல் சாரதி அம்பலப்படுத்தி உள்ளார்.  பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்திக் கொண்டு இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பினராயி விஜயன் அரசு மேற்கொள்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்.

வேல்முருகன்

கேரளாவில் மாவோயிஸ்ட் அமைப்பினர் மக்களைத் துன்புறுத்தும் வகையில் எந்தவித சட்ட விரோத நடவடிக்கைகளிலும் இதுவரை ஈடுபட்டதில்லை என்று  சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பினராய் விஜயன் ஆட்சியமைத்த கடந்த நான்காண்டுகளில் நடத்தப்படும் நான்காவது போலி மோதல் படுகொலை இதுவாகும். மற்ற முதலாளித்துவ ஆளும் வர்க்கக் கட்சிகளைவிட மிகக் கீழ்த்தரமான முறையில் மக்களுக்காகப் பாடுபடும் போராளிகளைப் படுகொலை செய்து வரும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பினராய் விஜயன் அரசு தொடர்ந்து மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து வருகிறது. எனவே பினராயி விஜயன் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும். வேல்முருகன் படுகொலையைக் கண்டிக்கின்ற அதேவேளையில் இந்தப் படுகொலை குறித்து வெளிப்படையான, முறையான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைக்குற்றம் பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வலியுறுத்துகிறது.

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday 28 October 2020

திருமா மீது வழக்கு: சென்னை வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை இரத்து செய்ய வேண்டும். 

வெட்டிச் சிதைக்கப்பட்ட காணொளியைப் பரப்பி  பொய் வழக்குப் போட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக வழக்குரைஞர் சங்கம் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றம் வாயிலில்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் பாரதி தலைமை தாங்கினார்.  வழக்குரைஞர்கள் கண்டன உரை ஆற்றினர்.

இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலர் மில்டன் கண்டன உரையாற்றினார். PRPC வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை




Saturday 17 October 2020

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு!

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநிலப் பொருளாளர் லயனல் அந்தோணிராஜ் அவர்களுடன் நேர்காணல்.


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday 14 October 2020

"மக்கள் நலன்" என்ற பெயரில் தொடரும் ஸ்டெர்லைட்டின் சதித்தனம்!

ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகள் விநியோகம் செய்த SDR தண்ணீர் கேன்கள் சோரீஸ்புரத்தில் தடுத்து நிறுத்தம்:

தூத்துக்குடி, அய்யனடைப்பு-சோரீஸ்புரம் பகுதியில் இன்று (14-10-2020) காலை 7.00 மணியளவில் ஒரு தனியார் வாகனத்தில் SDR குடிதண்ணீர் கேன்கள் மூலம் இலவசமாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. கேன் தண்ணீர் வாங்குபவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் "தாமிர சுரபி" என்ற பிரிண்ட் செய்யப்பட்ட QR கோடுடன் உள்ள அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரக்குறிப்புகள் பெற்று பதிவுசெய்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் கொடுக்கிறார்கள்.

இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அரசின் அனுமதியில்லாமல் தண்ணீர் விநியோகம் செய்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள். தண்ணீர் விநியோகம் செய்த நபர் தண்ணீர் கேன்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கிராம நிர்வாக அலுவலருக்கும், சிப்காட் காவல் துறையினருக்கும் மற்றும் உளவுத்துறை போலீசுக்கும் தகவல் கூறினார்கள். ஆனால் பிடிபட்டது "ஸ்டெர்லைட் விவகாரம்"  என்பதால் யாருமே சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் சோரீஸ்புரம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை கொடுத்து 30 க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களையும் ஒப்படைத்துள்ளனர். புகாரை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் "தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, காவல்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். "உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையை வரச்சொல்லுங்கள்" என்று விடாப்பிடியான போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் பகல் 12.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பிறகு தண்ணீரை தடுத்து நிறுத்திய சோரீஸ்புரம் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறிச்சென்றுள்ளனர்.

அதன்பிறகு  நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாமும் சட்ட உதவிக்கு காவல் நிலையம் சென்றோம். நடந்த விபரத்தை எழுதி புகாராக காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அரசின் அனுமதி இல்லாத காரணத்தால் தண்ணீர் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பல மணிநேர போராட்டத்திற்கு பிறகுதான், புகார் கொடுக்கும் நபர்கள் உறுதியாக இருந்ததைக் கண்டுதான் குறைந்தபட்சம் இதையாவது செய்தார்கள். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஸ்டெர்லைட்டை மூடிய உத்தரவிற்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவது குறித்து குமரெட்டியாபுரம் மக்களை சந்திக்க மக்கள் கூட்டமைப்பினர் சென்றபோது ஊருக்குள் நாங்கள் சென்ற 2-வது நிமிடத்தில் தலையாரி வந்தார். "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வந்தால் உடனடியாக தகவல் சொல்ல எனது மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள், அதனால் என்னை தப்பாக நினைக்க வேண்டாம், உங்கள் பெயர் முகவரியை கொடுங்கள்" என்றார். அதன்பிறகு 5-வது நிமிடத்தில் சிப்காட் காவலர்கள் புயல் வேகத்தில் வந்தனர். எங்களை விசாரித்தனர்.

ஆனால் இன்று தகவல் சொல்லி சுமார் 5 மணி நேரத்திற்கு பின்புதான் காவல்துறை வருகிறது. காவல்துறை இவ்வளவு காலதாமதமாக வருவதற்குள் சம்பவ இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?  ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அடித்துச் சாகட்டும் என்று சிப்காட் காவல்துறை நினைத்துக் கொள்கிறதா? இதுபோல சம்பவங்கள் தொடர்வதால் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை மீண்டும் மக்கள் எடுக்க வேண்டிய சூழல்  ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கடுமையாக எச்சரித்து சட்டப்படியான நடவடிக்கைகளை அவர்கள் மீது மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்  உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் நோக்கம் அதுவல்ல. சட்டம் ஒழுங்கை கெடுப்பதுதான் அவர்கள் திட்டம்.

இப்படியே சதித்தனமான வேலைகளை "மக்கள் நலன்" என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை அரங்கேற்றுவதை தூத்துக்குடி மக்கள் அறியாமல் இல்லை. அமைதி காக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மதிக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் ஆரவாளர்கள் நீதிமன்ற உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையையும் எப்போதுமே மதிப்பதில்லை என்பது தூத்துக்குடி மக்களுக்கு தெரியாததா? வேதாந்தா கார்ப்பரேட்டால் அரசு துறைகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. நாம் தான் கட்டவிழ்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டின் கடைசி செங்கலும் அகற்றப்படும் வரை தூத்துக்குடி தூங்காது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.



Saturday 26 September 2020

வேளாண் சட்டங்களின் நோக்கம் என்ன?

"வேளாண் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவதுதான். - பி. சாய்நாத்

23 செப்டெம்பர் 2020, BBC News

கேள்வி: ஒப்பந்த விவசாய முறையைப் பொறுத்தவரை, ஏற்கனவே கரும்பு விவசாயத்தில் இருக்கிறது. அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதில் என்ன தவறு?

பதில்: இவை எந்த மாதிரி ஒப்பந்தம் எனப் பார்க்க வேண்டும். இந்த ஒப்பந்தங்களில் விவசாயிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பேரம் பேசும் வலிமை இருக்காது. இதில் எழுத்து மூலமான ஒப்பந்தம் தேவையில்லை. சிவில் கோர்ட்களை அணுக முடியாது. விவசாயிகள் கொத்தடிமைகளாக மாற, அவர்களே செய்துகொள்ளும் ஒப்பந்தமாக இருக்கும். 

உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பாலின் விலையை எடுத்துக்கொள்வோம். மும்பையில் ஒரு லிட்டர் பசுவின் பால் 48 ரூபாய். எருமைப் பால் ஒரு லிட்டர் 60 ரூபாய். மாடு வைத்திருக்கும் விவசாயியிக்கு இந்த 48 ரூபாயிலிருந்து என்ன கிடைக்கிறது? 2018-19ல் பெரிய அளவில் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். அதன் முடிவில் விவசாயிக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 30 ரூபாய் விலை தருவதாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பெருந்தொற்று துவங்கிய பிறகு, ஏப்ரல் மாதம் முதல் விவசாயிக்கு கிடைப்பது லிட்டருக்கு 17 ரூபாய்தான். 50 சதவீதம் விலை குறைந்துவிட்டது. இது எப்படி நடந்தது? 

ஆகவே இந்தச் சட்டங்களின் நோக்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் சக்திகளை வலுப்படுத்துவதுதான். இது பெரும் குழப்பத்தில்தான் போய் முடியும். இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொந்தப் பணத்தை விவசாயத் துறையில் முதலீடு செய்ய மாட்டார்கள். பொதுமக்களின் பணம்தான் இதில் முதலீடு செய்யப்படும். 

பிஹாரில் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக்கூட சட்டமே கிடையாது. 2006ல் நீக்கிவிட்டார்கள். என்ன ஆனது? கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே விவசாயிகளுக்கு சேவை செய்கின்றனவா? முடிவில் பிஹார் விவசாயிகள் சோளத்தை ஹரியானா விவசாயிகளுக்கு விற்கிறார்கள். இதில் இருவருக்குமே லாபமில்லை. 

கேள்வி: விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்கலாம் என அனுமதிப்பன் மூலம் என்ன மோசமாகிவிடும்?

பதில்: இப்போதும் பெரும்பாலான விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியில்தான் விற்கிறார்கள். அது ஒன்றும் புதிது அல்ல. ஆனால், சில விவசாயிகள் விற்பனைக்கூடங்கள் மூலம் நன்மையடைகிறார்கள். அதையும் சிதைக்கப்பார்க்கிறார்கள்.

தொடரும்...!

Tuesday 22 September 2020

வழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலிலிருந்து வழக்குரைஞரை நீக்குவதா?

ஒரு வழக்குரைஞர் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலே அந்த  வழக்குரைஞரை, வழக்குரைஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாம் என தமிழ்நாடு பார் கவுன்சிலின் முடிவை எதிர்த்துத் தமிழக வழக்குரைஞர்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

பென்னாகரம்

வழக்குரைஞர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தொழில் தடை செய்யலாம் என்ற தமிழ்நாடு பார் கவுன்சிலில் நடவடிக்கையை கண்டித்து பென்னாகரம் வழக்குரைஞர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டம்!


கோவில்பட்டி

வழக்குரைஞர் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்கம்

22-09-2020 (JAAC தீர்மானத்தின்படி) தமிழ்நாடு பார்கவுன்சில் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் உடனடியாக இடை நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற  வலியுறுத்தி கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாபெரும் ஆர்பாட்டம்!


கோவை

வழக்குரைஞர் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- கோவை வழக்குரைஞர்கள் சங்கம்

22-09-2020 (JAAC தீர்மானத்தின்படி) தமிழ்நாடு பார்கவுன்சில் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் உடனடியாக இடை நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற  வலியுறுத்தி கோயமுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


ஈரோடு

வழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலில் இருந்து நீக்குவதா? -நீதிமன்ற வளாகத்தில் ஈரோடு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க பொதுக்குழு முடிவின்படி, ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் அசோசியேஷன் சார்பில் இன்று (22.09.2020) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு வழக்குரைஞர்கள் அசோசியேஷன் தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், "வழக்குரைஞர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தாலே, பார் கவுன்சிலில் இருந்து நீக்கி விடுகின்றனர். ஆகையால், வழக்குரைஞர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே, இனி பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்நது, வழக்குரைஞர்கள் அசோசியேஷனை சேர்ந்த வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

- நக்கீரன், 22/09/20



Sunday 20 September 2020

'நீட்' எதிர்ப்பு: மக்கள் பாதை மீது காவல்துறை அடக்குமுறை!

 பத்திரிக்கைச் செய்தி:

'நீட்' தேர்வை எதிர்த்து சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய மக்கள் பாதை அமைப்பின் மீதான காவல்துறையின்  தாக்குதலைக் கண்டிக்கிறோம்!!

'நீட்' தேர்வை எதிர்த்து கடந்த 6 நாட்களாக சென்னையில் உள்ள  தங்கள் தலைமை அலுவலகத்தில்  உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவந்த மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த 6 பேர் இன்று காலை 6 மணிக்குக் கைது செய்யப்பட்டு  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பாதை அலுவலகம் காவல்துறையால்  சூறையாடப்பட்டது,  ஏராளமான கோப்புகள் திருடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பைச் சேர்ந்த வெற்றிசெல்வி தெரிவித்துள்ளார்.

அலுவலகம் காவல்துறையால் சட்டவிரோதமாக மூடிவைக்கப்பட்டுள்ளது. 

ஒருபுறம் 'நீட்' தேர்வை எதிப்பதாக பேசிக்கொண்டே,  'நீட்' தேர்வை எதிர்த்து அமைதி வழியில்  போராடுபவர்களைக் காவல்துறையைக் கொண்டு தாக்கும் தமிழக அரசின் இரட்டை வேடத்தை, காவல்துறை தர்பாரைக் கண்டிக்கிறோம். 

இது தொடர்பாக மக்கள் பாதை அமைப்பைச் சார்ந்த திரு.நாகல்சாமி அவர்களைத் தொடர்பு கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.  அவர் சென்னை காவல்துறை ஆணையர் அவர்களை தொடர்புகொண்டு பேசியதாகவும், போராட்டத்தை கண் கைவிட்டால் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதாக காவல் ஆணையர்  கூறியதாகத் தெரிவித்தார். காவல் ஆணையர் இப்படிப் பேசுவதே மிரட்டல், சட்டவிரோதம். அமைதிவழிப் போராட்டத்தை ஒடுக்கும் குறுக்குவழி. அரசியல்அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் அமைதி வழியில் போராடும் உரிமைக்கு எதிரானது. உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது.  

'நீட்' தேர்வை எதிர்ப்பதாக நாடகமாடும் எடப்பாடி அரசாங்கம் காவல்துறை மூலம் நீட்டுக்கு எதிராகப் பேசுவதை, போராடுவதைத் தடி கொண்டு ஒடுக்கி பா.ஜ.கா - மோடி அரசுக்குச் சேவகம் செய்வதை ம.உ.பா.மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - சென்னை

Thursday 17 September 2020

வழக்குரைஞர்களைப் பாதுகாக்க JAAC போராட்டம் அறிவிப்பு!!

 JAAC_பொதுக்குழு_தீர்மானம் 

தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்குரைஞர்களை விசாரணையின்றியும், குற்றம்சாட்டப்பட்ட வழக்குரைஞர்களிடம் எந்தவித விளக்கம் கேட்காமலும் இடைநீக்கம் செய்வதை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேற்படி இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற பொதுக்குழு வலியுறுத்துகிறது. அவ்வாறு இடைநீக்கத்தைத் திரும்ப பெறவில்லையெனில் வரும் 22-9-2020 அன்று தமிழகம் முழுக்க நீதிமன்றங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அந்தந்த வழக்குரைஞர் சங்கங்கள் நடத்த முடிவு செய்யபடுகிறது.

அதன் பின்பும் இடைநீக்கம் திரும்ப பெறும் கோரிக்கையை பார்கவுன்சில் ஏற்காவிட்டால் 34(1) போராட்டத்தின் பொழுது நடைபெற்ற உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம் போன்று தமிழகம் முழுக்க உள்ள வழக்குரைஞர்களைத் திரட்டி தமிழ்நாடு பார்கவுன்சிலை  முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என பொதுக்குழு முடிவு செய்கிறது. 

மேலும் வழக்குரைஞர் தொழில் சம்மந்தம் இல்லாத பிரச்சனைகளில் வழக்குரைஞர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு பார்கவுன்சில் தலையீடு செய்யகூடாது என பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேலும், நீதிமன்றத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்தப்படுகிறது.

JAAC, 

தமிழ் நாடு


பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அதிமுக அரசு அகற்றுமா?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் -  தமிழ்நாடு

(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE - TAMILNADU)

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

150-E, K.K.NAGAR, MADURAI-20, 

98653 48163, 90474 00485.

++++++++++++++++

நாள்:17.09.2020

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அதிமுக அரசு அகற்றுமா?

அர்ச்சக அரசுப் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீடு அமலாவது எப்போது? 

பத்திரிக்கைச் செய்தி

 தந்தை பெரியார் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப்பாதுகாப்புடனும், சாத்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படுகிறது என்று திண்ணமாக  எண்ணியதன் விளைவாகவே, சாதியொழிப்பிற்குச் சட்டமாற்றங்களும், சாத்திர நம்பிக்கை உடைப்பும் தேவை என்று தீவிரக் களப்பணியாற்றினார். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு , சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை என்றும், சமூகமாற்றம் , சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால்தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார், அந்தச் சட்டப் பிரிவுகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். தந்தை பெரியார் அவர்கள் 1957 இல் சட்டஎரிப்புப் போராட்டம் அறிவிக்கும்வரை, இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கடவுள் இல்லை என்று தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங்களும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று நடத்திய போராட்டங்களும்  சாதியொழிப்புத் தளத்திலிருந்து நடத்தப் பட்டவை. சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கருவறைகளில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று ஒலித்தது பெரியாரின் குரல்.

இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்துச் சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

கடந்த 28-2-2007 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள்  மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில்  1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில்  50க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர். ஆனால் கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற  மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.

இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கியக் கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்ட கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணி நியமனம் கூடாது  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை. 

அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு இன்றுவரை பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்து மதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை என்றால் கருவறையில் உள்ள  சாதி - தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துச் சாதி அர்ச்சகர் பணி என்று தந்தை பெரியார் சொன்னார். தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்கமாய் தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அரசு தீர்ப்பு வந்தும் நான்கு ஆண்டுகளாய் மவுனம் காக்கிறது.

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும்  கருவறைத் தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாளிலாவது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோர் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவிக்க வேண்டும். உடனே, இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கியக் கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த  203 மாணவர்களுக்கு,  இந்து சமய அறநிலையத்துறை  பணிநியமனம் வழங்க வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ - வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள்  அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.  

எனவே தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளில் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர் பள்ளியில் ஆகமம் கற்று. தீட்சை பெற்ற 203 மாணவர்களுக்கும் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது.

-------------------------------------

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன், 

மாநில ஒருங்கிணைப்பாளர்,

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு


வா.ரங்கநாதன், 

தலைவர், 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

Tuesday 15 September 2020

தமிழ் நாட்டின் கல்வி உரிமையைக் காலி செய்யவே "நீட்"!

+2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணவர்களின் மருத்துவர் கனவு "நீட்" தேர்வால் கானல் நீராகி வருகிறது. நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நீட் மூலம் தமிழக மக்களின் கல்வி உரிமை எவ்வாறு பறிக்கப்படுகிறது என்பது குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை.

நன்றி: Arakalagam tv

இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித் தொகை!

இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை !

BAR council Chairman அவர்களைச் சந்தித்து நன்றி அறிவிப்பு!!

சென்னையில் அரசு சட்டக்கல்லூரி !

BAR council Chairman உறுதி!!

AIBE தேர்ச்சி பெறாதவர்களுக்கும் COVID உதவித்தொகை தர நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை இளம் வழக்குரைஞர்கள் சார்பாக 176 இளம் வழக்குரைஞர்கள் ஆதரவோடு பார்கவுன்சிலுக்கு 18.04.2020 & 24.05.2020 அன்று இரண்டு மனுக்கள் அளித்திருந்தோம்.

அம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது AIBE தேர்வாகாத வழக்குரைஞர்களுக்கும் சென்ற வாரம் முதல் 4000 ரூபாய்க்கான Cheque வழங்கப்பட்டு வருகிறது.

BAR council ன் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 3.30 மணிக்கு BCTNP Chairman திரு. அமல்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தோம்.

நாம் சென்ற விஷயத்தை தெரிந்துகொண்ட பின், "உண்மையில் உங்களது மனுக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள வழக்குரைஞர்களுக்கு என்னால் இதனைச் செய்ய முடிந்தது." என்று வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவரது வார்த்தைகள் நம்முடைய உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக இருந்தது.

பிறகு Chennai Young Advocates செயல்பாடுகளான Physically Challenged PIL, Manual Scavengil PIL, Legal Seminars போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டோம். நமது செயல்பாடுகள் மிகுந்த மகிழச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

Chennai Young Advocates குழுவிலுள்ள மூவர் (Thilagavathy, Singaravelan, Sarathkumar) University Gold Medal வாங்கும்பொழுது மேடையில் அவரிடம் வாழ்த்து பெற்றதை நினைவுகூர்ந்து மகிழ்ந்தார்.

நாம் சென்னை சட்டக் கல்லூரிக்குள் 16 நாட்கள் தங்கி போராடியதையும், அதன்பின் இடமாற்றத்தை மையப்படுத்தி நீதியரசர் திரு.ஹரிபரந்தாமன் அவர்களை அழைத்து பார்கவுன்சில் கட்டிடத்தில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தியதை நினைவு படுத்தியதோடு, புதுப்பாக்கம் சட்டக்கல்லூரி பொங்கல் தினத்தில் சென்னையில் சட்டக்கல்லூரி மீண்டும் கொண்டுவரப்படும் என பேட்டியளித்தது எங்களுக்கு மிகுந்த மன நிறைவாக இருந்ததென பகிர்ந்து கொண்டோம்.

சட்டக் கல்லூரிக்காக நாம் நடத்தியப் போராட்டத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார். அதன் பின் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.

பிறகு, "எனது பதவிக்காலம் முடிவதற்குள் சென்னையில் நிச்சயம் அரசு சட்டக்கல்லூரி கொண்டுவரப்படும்" என்று உறுதியளித்தார்.

மேலும், மாவட்டந்தோறும் சட்டக்கல்லூரி திறக்கப்பட BAR Council தீர்மானம் நிறைவேற்றி, 09.09.2020 அன்று தமிழக அரசிடம் அளித்த மனுவினை கொண்டுவரச்சொல்லி நம்மிடம் காண்பித்தார்.

உதவித்தொகை வழங்கப்பட்டதை விட இந்தத் தகவல்கள்தான் உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்பதை பகிர்ந்து கொண்டோம்.

பின்பு, நமது செயல்பாடுகளை அங்கீகரித்து, இளம் தலைமுறையினர் இப்படி சமூக உணர்வோடு செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறி, சென்னை இளம் வழக்குரைஞர்களுக்கு தமது பாராட்டுதலைத் தெரிவித்தார்.

இறுதியாக, இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்த Bar Council Chairman அவருக்கும், இதர Bar Council உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து, நாம் கொண்டு சென்ற நன்றி அறிவிப்புக் கடிதத்தை கொடுத்து வந்தோம்.

தொடர்ந்து பணியில்...

தகவல்

சென்னை இளம் வழக்குரைஞர்கள்

#Chennai_Young_Advocates

தொடர்ந்து உற்சாகமாக வேலை செய்யும் இளம் வழக்கறிஞர்களை வாழ்த்துகிறோம்! 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

Monday 24 August 2020

தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்!

19-08-2020-ம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)  இணைய வழிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் திரு.பிரசாந்த் பூஷன் அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் கைவிடவேண்டுமென்றும்;

மேற்படி கோரிக்கையை வலியுறுத்தும் முகமாக 24-08-2020 ம்தேதி காலை 11 மணியளவில் அந்தந்த நீதிமன்றங்களின் முன்பாக  சமூக இடைவெளிவிட்டு ஆர்பாட்டம் நடத்துவதென்றும்; 

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணையவழி நீதிமன்றங்களுக்குப் பதிலாக திறந்த நீதிமன்றங்களில் (open court) வழக்குகளை நடத்த வலியுறுத்த வேண்டுமென்றும்,

2. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட 5 நபர் கொண்ட குழுவை எதிர்ப்பதற்கு பிராந்தியக் குழு அமைக்கப்படும் பட்சத்தில் அதில் நமது கூட்டுக்குழு வின் உறுப்பினர்கள் இடம்பெறவேண்டுமென்றும்:

3. Contempt Of Courts Act, Judicial Officers Protection Act ஆகிய இரண்டு சட்டங்களையும் இரத்து செய்திட வேண்டுமென்றும் மற்றும்

4. ஐந்து மாதங்களாகியும் வழக்குரைஞர்களுக்கு அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை, எனவே உடனடியாக வழக்குரைஞர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்

தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

ப.நந்தகுமார் 

தலைவர் 

JAAC

மேற்கண்ட தீர்மானங்களின் ஒரு பகுதியாக 24.08.2020 அன்று பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 

மதுரை


கும்பகோணம்


விருத்தாச்சலம்


உடுமலைப்பேட்டை


பத்மநாபபுரம்


திருச்சி


கோயம்புத்தூர்


நாகப்பட்டினம்


வேலூர்

தமிழ் இந்து 25.08.2020

திருவாரூர்



குழித்துறை


நாகர்கோவில்


தருமபுரி