Monday 24 August 2020

தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்!

19-08-2020-ம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)  இணைய வழிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் திரு.பிரசாந்த் பூஷன் அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் கைவிடவேண்டுமென்றும்;

மேற்படி கோரிக்கையை வலியுறுத்தும் முகமாக 24-08-2020 ம்தேதி காலை 11 மணியளவில் அந்தந்த நீதிமன்றங்களின் முன்பாக  சமூக இடைவெளிவிட்டு ஆர்பாட்டம் நடத்துவதென்றும்; 

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணையவழி நீதிமன்றங்களுக்குப் பதிலாக திறந்த நீதிமன்றங்களில் (open court) வழக்குகளை நடத்த வலியுறுத்த வேண்டுமென்றும்,

2. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட 5 நபர் கொண்ட குழுவை எதிர்ப்பதற்கு பிராந்தியக் குழு அமைக்கப்படும் பட்சத்தில் அதில் நமது கூட்டுக்குழு வின் உறுப்பினர்கள் இடம்பெறவேண்டுமென்றும்:

3. Contempt Of Courts Act, Judicial Officers Protection Act ஆகிய இரண்டு சட்டங்களையும் இரத்து செய்திட வேண்டுமென்றும் மற்றும்

4. ஐந்து மாதங்களாகியும் வழக்குரைஞர்களுக்கு அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை, எனவே உடனடியாக வழக்குரைஞர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்

தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

ப.நந்தகுமார் 

தலைவர் 

JAAC

மேற்கண்ட தீர்மானங்களின் ஒரு பகுதியாக 24.08.2020 அன்று பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 

மதுரை


கும்பகோணம்


விருத்தாச்சலம்


உடுமலைப்பேட்டை


பத்மநாபபுரம்


திருச்சி


கோயம்புத்தூர்


நாகப்பட்டினம்


வேலூர்

தமிழ் இந்து 25.08.2020

திருவாரூர்



குழித்துறை


நாகர்கோவில்


தருமபுரி


காவல்துறையினரிடம் அதிகாரத்தைக் குவிக்கும் குற்றவியல் சட்டத் திருத்தங்கள்!

காவல்துறையினரிடம் அதிகாரத்தைக் குவிக்கும் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் குறித்து தெளிவு படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் அவர்கள்.

Zhagaram voice utube channel-லுக்கு அளித்த நேர்காணல்.

கீழுள்ள இணைப்பில்....

https://youtu.be/ELjHoT9ZpJY

Saturday 22 August 2020

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுப்பது யார்?

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் -  தமிழ்நாடு

(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE - TAMILNADU)

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

150-E, K.K.NAGAR, MADURAI-20, 

98653 48163, 90474 00485.

+++++++++++++++++

நாள்:22.08.2020

14 ஆண்டுகளாய் நீதி இல்லை! அர்ச்சக அரசுப் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார்?

பத்திரிக்கை செய்தி

இந்திய அளவில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை என பலவற்றில் பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கும் தமிழகம் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையிலே 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற சட்டம் இயற்றப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும் எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை.  இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறை நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

 "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக சட்டம் நிறைவேற்றி இன்றுடன் (ஆகஸ்ட் 22 ) 14 ஆண்டுகள் முடிவடைகிறது. 

28-2-2007 , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள்  மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில்  1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள்.திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில்  50க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.

கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற  மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.

ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை. 

அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு.மாரிச்சாமி என்பவருக்கு மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது.தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள  சாதி - தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி,  ஒவ்வொரு சாதிக்கும் தனிசுடுகாடு அமைத்துக் கொடுப்பதுபோல, தனியாக உள்ள சிறு கோவில்களில்  பிராமணர் அல்லாத மற்ற சாதி மாணவர்களை பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாக செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு  ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதல் கிடையாது. 

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும்  கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.

பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட  மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த   200-க்கும் மேலான மாணவர்களுக்கு,  இந்துசமய அறநிலையத்துறை  பணிநியமனம் வழங்க வேண்டும். 

பணிநியமன நிகழ்வு  இந்துசமய அறைநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக  நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ - வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள்  அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி,தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.  

எனவே கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சங்கங்களும், அனைத்து முற்போக்கு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வலியுறுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, 

தமிழக அரசிடம் !

தமிழகத்தில்  அரசு கட்டுப்பாட்டில் 38,000 கோயில்கள் உள்ளன. அதில்  தகுதி திறமை  உள்ள அனைத்து சாதியினரையும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும்

சைவ-வைணவ வழிபாட்டு முறையில் முறையாக பயிற்சி பெற மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களை அரசு மீண்டும்  திறக்க வேண்டும்.

என்று கோருகிறோம்.

-------------------------------------

வழக்கறிஞர்.வாஞ்சிநாதன், 

மாநில ஒருங்கிணைப்பாளர்,

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

வா.ரங்கநாதன், 

தலைவர், 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

#கருவறையில்_தீண்டாமை

#SaveTemplesFromBrahmanism

Tuesday 18 August 2020

கரோனா நிவாரணப் பணியில் வடசென்னை மக்கள் உதவிக் குழு!

 நண்பர்களே,

தொடர்ந்து அரசு அறிவித்து வரும் ஊரடங்கால், பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. பல தொழில்களுக்கு இன்னும் அரசு அனுமதி தரவில்லை. ஆகையால், இன்றும் வாழ்வாதார நெருக்கடியில் மக்கள் இருக்கிறார்கள்.  ஆகையால், வட சென்னை மக்கள் உதவிக்குழு தொடர்ந்து மக்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த வியாழக்கிழமை அன்று (06/08/2020) நூறு பேருக்கு ஒரு குடும்பத்திற்கு தேவையான‌ அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு  உள்ளிட்ட மளிகைத் தொகுப்பை வழங்கினோம். 

குழு ஆரம்பித்ததிலிருந்து இதுவரை ஆயிரத்து பத்து பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்.  இன்றைய பயனர்களில் 25 பேர் புதுவண்ணை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கும் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும், 75 பேர் தமிழ்த் திரைப்படத் துணை நடிகர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது.

நாம் மேலே சொன்னது போல ஊரடங்கில் இன்னும் பல தொழில்கள் முடங்கித்தான் போயிருக்கிறது. ஆகையால், மக்களுக்குத் தேவையும் அதிகமாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் ஊரடங்கு அறிவித்த‌ அரசு தான் கவனம் கொடுத்து செய்ய வேண்டும்.  ஆனால், செய்வதில்லை. நம் மக்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம்மால் இயன்ற சிறிய உதவிகளைச் செய்துவருகிறோம்.

ஆகவே, இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இயன்றவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சிரமப்படுபவர்கள் உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளவும் ,

நன்கொடை அளிக்க ,

C. Noordeen.  Canara Bank, 

Thambuchetty Street Branch. 

S.B. A.C.No.  0913101289441. 

IFSC. CNRB0000913.

G pay no. 9884189570

பின்குறிப்பு :  உதவி பெறுகிறவர்களின் முகங்களை எப்போதும் மறைப்போம். இப்பொழுது அனைவருமே மாஸ்க் அணிந்திருப்பதால், முகங்களை மறைக்கவில்லை.

தகவல்:

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை

மதுரையில் கரோனா மருத்துவ முகாம்!

கரோனா : மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்கள் மருத்துவ முகாம்!

#முதல்நாள் மருத்துவ முகாமில்… (06/08/2020)

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பாக கரோனா தடுப்பு ஹோமியோபதி மருந்து ஆர்சனிக்கம் ஆல்பம் 30 மதுரை நகர் சுற்று வட்டார ஊர்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று மதுரை நகர்ப் பகுதிகளில் பரவி வருகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆர்சனிக்கம் ஆல்பம் 30 மருந்தினை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் என்று மக்களிடம் பலத்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அதை விரும்பிக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மருந்துக் கடைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ம.உ.பா.மையம் மதுரை மற்றும் சென்னையில் சில தன்னார்வலர்களுடன் இணைந்து பல ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.

தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி  மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இன்று மதுரை நகர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மருந்து வழங்கப்பட்டது. 

கல்லூரி முதல்வர் மரு.கார்த்திகேயன் அவர்களின் பரிந்துரைப்படி பேரா.அரிகரன் அவர்கள் 3000 மருந்து குப்பிகள் (container) (ஒரு குப்பி மருந்தை 6 பயனாளிகள் உட்கொள்ளலாம்) வழங்கியும் மரு.முருகேசன், மரு.திருவரங்கன் ஆகிய இரண்டு மருத்துவர்களை அனுப்பியும் உதவினர். 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் அவர்களது பொறுப்பில் விளாச்சேரி ஊராட்சிமன்றத் தலைவர் திரு.முருகன் அவர்கள் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் முகம்மது பிச்சை அவர்களது முன்னிலையில் இன்று காலை 10 மணிமுதல் 2 மணிவரை விளாச்சேரி, மகாலட்சுமி காலனி, மொட்டமலை, திருநகர், அக்கிரகாரம், 5-வது வார்டு பகுதிகளில்  6000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

பிற்பகல் 4-00 மணியளவில் யா.ஒத்தக்கடை சுற்றுப் பகுதிகளில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் திரு.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் APJ அப்துல் கலாம் அபே ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்கத் தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் 4000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியைக் கடைபிடித்தனர். மருத்துவர்கள் இருவரும் மருந்து உட்கொள்ளும் முறை, கொரோனாவிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை விளக்கியும் மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தும் மருந்துக் குப்பிகளை விநியோகித்தனர்.

மருந்துக்குப்பிகளை வழங்கிய திருமங்கலம் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மருந்துகளை விநியோகித்த மருத்துவர்களுக்கும் நிகழ்வுகளுக்குத் தலைமை  ஏற்ற விளாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், ஆட்டோ சங்கத் தலைவர் சேக் அப்துல்லா மற்றும் மக்கள் அதிகாரம் மதுரை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சரவணன் ஆகியோருக்கு ம.உ.பா.மையம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

#இரண்டாம் நாள் மருத்துவ முகாமில்… (07/08/2020)

மதுரை, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சோளங்குருணியில் ஊராட்சித் தலைவர் திரு.மணிராஜ் அவர்கள் தலைமையில் 1500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. குசவன் குண்டு கிராமத்தில் திரு.பெரியகருப்பன் (PRPC) தலைமையில் 1000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

வலையங்குளத்தில் ஊராட்சித் தலைவர் திருமதி முத்துப் பிள்ளை பெருமாள் அவர்கள் தலைமையில் முன்னாள் தலைவர் திரு வெ.பிச்சை(PRPC) அவர்கள் முன்னிலையில் பெருமாள் கோவில் அருகில் திருமண மண்டபத்திலும் வ.குளம் காலனி, 20 வீட்டுக் காலனி ஆகிய இடங்களிலும் 4000 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்து மருந்து வாங்கிச் சென்றனர். முகாம் தொடக்கத்தில் கொரோனா  டெஸ்ட் எடுப்பதாகக் கருதி வரத் தயங்கிய மக்கள் பின்னர் ஹோமியோ மருந்து தரப்படுவதை அறிந்து சாரை சாரையாக வந்து வாங்கிச் சென்றனர். தோழர்கள் பெரிய கருப்பன், பழனிக்குமார், அய்யனார், சுப்பிரமணி ஆகியோர் முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தனர்.

மாலை 5.30 முதல் 7.30 மணி வரை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முண்டு வேலம்பட்டி,மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ந.குருசாமி அவர்கள் தலைமையில் தோழர் திசை கர்ணன் முன்னிலையில் 1500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பொழுது சாய்ந்த பின்னும் மக்கள் ஆர்வமுடன் வந்து விளக்கங்களைக்  கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிச் சென்றனர். 

6,7-08-2020 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற முகாம்களை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

அனைத்து பயனாளிகளும் மருந்தினை உட்கொண்டு  நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று கொரோனாவை வெல்ல வாழ்த்துகிறோம்.

மருந்தினை இலவசமாக வழங்கி மருத்துவக் குழுவினையும் அனுப்பி உதவிய  திருமங்கலம் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பொறுப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகிறது.

லயனல் அந்தோணிராஜ்,

செயலர்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,

மதுரை.

7339329807


ஸ்டெர்லைட் தீர்ப்பைக் கொண்டாடும் தமிழகம்!

தூத்துக்குடி மக்களை அச்சுறுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து வழங்கிய தீர்ப்பைத் தமிழகமே கொண்டாடுகிறது.

கொண்டாட்டத்தில் நாமும் பங்கேற்போம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தூத்துக்குடியிலிருந்து....

தீர்ப்பை வரவேற்கிறோம். 

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை பிரித்து அகற்ற வேண்டும்! 

                                                               ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் வரவேற்கிறோம். இதற்காக உழைத்த அனைத்து பொது மக்களுக்கும், கட்சிகளுக்கும்,  அமைப்புகளுக்கும்,  இயக்கங்களுக்கும் தூத்துக்குடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு இந்த தீர்ப்பினை பயன்படுத்தி தூத்துக்குடி மக்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

1.ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி  சிப்காட் வளாகத்தில் இருந்து பிரித்து அகற்ற வேண்டும்.

                                                                   2.ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

                                                                         3.பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

4.மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்யக்கூடாது.

5.உயிர் தியாகம் செய்த 15 தியாகிகளுக்கு தூத்துக்குடி மையப்பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும். 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,

தூத்துக்குடி

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

வழக்குரைஞர் அரிராகவன் பேட்டி.....


மதுரையிலிருந்து....

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அறிக்கை.

இன்றையத் தீர்ப்பு வரை அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு மடத்தூரில் உருவாகியது முதல்...

தொடர் போராட்டங்கள், கூட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டம், மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, மறு பிரேதப் பரிசோதனை வழக்கு, சட்ட உதவி வழக்கு, தலைமறைவு வாழ்க்கை, சென்னை ஏர்போர்ட்டில் கைது, பாளையங்கோட்டை சிறை, வீடு, அலுவலகம் ரெய்டு,  273 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றியது, தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், 100-க்கும் மேலான வழக்குகளை உடைத்தது, பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், இன்றுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் நுழைய நீடிக்கும் தடை, இன்றையத் தீர்ப்பு என அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

- வாஞ்சிநாதன்,

வழக்கறிஞர்,

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,

தமிழ்நாடு.


சென்னையில்.....

ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் வழக்குரைஞர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். 

வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் பேட்டி.....


தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை மற்றும் தூத்துக்குடி

தொடர்புடைய பதிவுகள்:

தீர்ப்புக்குப் பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு!

தீர்ப்புக்குப் பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு!

உயர்நீதிமன்றத்தில் இன்று வந்த தீர்ப்பு....

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இலட்சக்கணக்கில் கலந்துகொண்ட மக்களுக்கும், உயிர்நீத்த போராளிகளுக்கும் கிடைத்த வெற்றி!

தீர்ப்பு வந்த பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு.

ஸ்டெர்லைட்டை உடனடியாக சிப்காட்டிலிருந்து அகற்றவேண்டும்.

ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும்! நாமும் நமது போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை.

நன்றி: அறக்கலகம்

Advocates of Tamilnadu stand with Prashant Bhushan!

Silent Gathering!

A three-judge Bench headed by Justice Arun Mishra found two tweets by Senior Advocate Prashant Bhushan amounting to “criminal contempt and scandalising the Court". Punishment deferred on 20.08.2020.

We have serious concern on verdict of Supreme Court against Mr. Prashant Bhusan and discussed with the members of Bar, Senior Advocates across Tamilnadu and planned for silent gathering.

On the basis, today we initiated a first phase of peaceful protest in Madras High Court, at the AAVIN gate entrance by tie our eyes and mouth with black cloth with proper COVID safety measures and social distancing.

More than 100 Madras High Court including Senior Advocate Vijayakumar, Ayyadurai and Advocates Milton, Parventan, Bharathi, Elango, Xavier Felix, Sathya Paul, Parthasarathy, Karkivelan and Sivakumar were participated.

Today, Madurai Advocates also protested in a peaceful manner and further every district advocates are organising silent gathering/protest to show our solidarity across Tamilnadu to save democracy, freedom of expression and fundamental rights.

The Banners with following slogans hold by the advocates in long standing line.

 ◆ Repeal archaic, colonial criminal contempt law.

 ◆ We stand with Mr Prashant Bhushan.

 ◆ Drop contempt proceedings against Prashant Bhushan . Protect freedom of speech and expression.

 ◆ No Bar , No Bench. Protect independance  of both Bar and Judiciary.

*MADRAS HIGH COURT ADVOCATES*

Message from

PRPC, Chennai

Related Article:

பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக தமிழக வழக்குரைஞர்கள்!


Proceedings Against Prashant Bhushan Are A Travesty Of Justice': Chennai Lawyers Write To SC [Read Statement]

https://www.livelaw.in/news-updates/proceedings-against-prashant-bhushan-are-a-travesty-of-justice-chennai-lawyers-write-to-sc-read-statement-161639

https://theleaflet.in/lawyers-from-chennai-express-deep-anguish-to-chief-justice-of-india-on-prashant-bhushans-conviction-read-letter/

பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய வழக்குரைஞர்கள்!

உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்குரைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் பிரசாந்த் பூஷன் அவர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் குற்றவாளி என 14.08.2020 அன்று அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் தண்டனை தொடர்பான விவாதம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றால் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆலைகளும், நிறுவனங்களும் மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்ப முயலும் இன்றைய சூழலில்தான் மேற்கண்டத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். 

காஷ்மீருக்கான 370 நீக்கம் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது பிரசாந்த் பூஷன் மீதானா வழக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவரின் ஹார்டி டேவிட்சன் என்கிற விலை உயர்ந்த மோட்டர் சைக்கிளில் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அவர்கள் அமர்ந்திருப்பது குறித்து ஜூன் மாதத்தில் ஒரு ட்வீட் செய்தியையும், ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு, கடந்த நான்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் காலம் ஜனநாயகத்தை அழிப்பதற்கான காலம் என்று ஜூலை மாதத்தில் ஒரு டுவீட் செய்தியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷன் அவர்கள் வெளியிட்டிருந்தார். 

இந்த இரண்டு ட்வீட் செய்திகளும் நீதித்துறையின் மாண்பையும் அதிகாரத்தையும் களங்கப்படுத்தி விட்டதாக பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டு குற்றவாளி என அறிவித்துள்ளது என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.

பொது நலன் சார்ந்து இந்த அவமதிப்பு வழக்கை அவர்கள் எடுக்கவில்லை. மாறாக  தங்களை எப்படிக் கேள்வி கேட்கலாம் என்கிற மன்னராட்சி காலத்து மனநிலையிலேயே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கையாண்டியிருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் காலாவதியாகிப்போன நீதிமன்ற அவமதிப்பு என்கிற துருப்பிடித்த தடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். 

அணை கட்டுவதற்கான தடையை நீக்கியதற்காக அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா அவர்களை விமர்சித்ததற்காக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி ஒருநாள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் சட்ட ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குச் சட்டத்தையே ஒழிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ள சூழலில் இந்தியாவில் மட்டும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயகவாதிகள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்களின் குரல் வளையை நெரித்து அவர்களை மௌனிக்கத் சொல்கிறது நீதிமன்றம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் உச்ச நீதிமன்றமே அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கும் காலனாக இருப்பது மிகவும் ஆபத்தானது.

பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றவாளி என அறிவித்துள்ளதை திரும்பப் பெறக் கோரியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குச் சட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கக் கோரியும் தமிழக வழக்குரைஞர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 18.08.2020 அன்று சென்னையிலும் மதுரையிலும் வழக்குரைஞர்கள் ஒன்றுகூடி உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

சென்னையில் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள்:

மதுரையில் வழக்குரைஞர்கள்:

19.08.2020 அன்று திருவண்ணாமலையில்.....

நாகர்கோவில்

திருச்சி

வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் திரும்ப பெற வலியுறுத்தியும், கருத்துரிமையைக் காக்கும் கடமையிலும் பொறுப்பிலும் இருக்கின்ற உச்ச நீதிமன்றமே கருத்துரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும், அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் செயலை ஒருபோதும் வழக்குரைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும்..அதனைக் காக்க மக்களை அணிதிரட்டி கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை முறியடிப்போம் என முழங்கி திருச்சி வழக்குரைஞர்கள் இன்று நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்


திருநெல்வேலி

விழுப்புரம்

விழப்புரம் நீதிமன்றம் முன்பு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிசாந்த் பூஷன் மீது போடப்பட்ட  வழக்கை கைவிடக்கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது மாநில துணைத்தலைவர்கள் ராமமூர்த்தி சங்கரன் மற்றும் மாவட்ட துனைத்தலைவர் கண்ணப்பன் பிரகாஷ் சம்சுதீன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தார்கள்.

பிற மாநிலங்களில்

பஞ்சாப்

ஒடிசா

கர்நாடகா 

பெங்களூரு

தெலங்கானா

ஹைதராபாத்


தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை, மதுரை மற்றும் திருவண்ணாமலை

&

முகநூல் பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள்:

https://www.barandbench.com/news/navroz-seervai-statement-on-supreme-court-judgment-prashant-bhushan-contempt

https://m.thewire.in/article/law/watch-karan-thapar-interview-dushyant-dave-prashant-bhushan-contempt-arun-mishra

https://scroll.in/latest/970379/dark-day-for-indian-democracy-pucl-lawyers-politicians-slam-sc-ruling-against-prashant-bhushan