Tuesday 27 April 2021

ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது சரியா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்திருப்பது தூத்துக்குடி மக்களிடம் மட்டுமல்ல தமிழக மக்களிடையேயும் ஓர் அதிர்ச்சிப் பேரலையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மோடியும் எடப்பாடியும்தான் முக்கியக் காரணம் என்றாலும்கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல என்பதை அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்.


நன்றி: Arakalagam

குவியும் பிணங்கள்! கதறும் மக்கள்! மோடியின் கையாலாகாத்தனம்!

கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், வரும் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், நோய்த் தொற்றுக்கு ஆளானோர் சுவாசிக்க பிராணவாயுகூட இல்லாமல் வட இந்தியாவில் பிணங்கள் குவிகின்றன. இராமனுக்குக் கோவில் கட்டினால் போதாது; கொத்துக் கொத்தாய் மடியும் மக்களைக் காக்க குறைந்தபட்ச மருத்துவ வசதியைக்கூட செய்யத்தவறிய கையாலாகாத மோடியின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் ‌‌‌‌‌அவர்கள்


நன்றி: கருஞ்சட்டைப் படை

.

Sunday 18 April 2021

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக-வினருக்கு அருகதை உண்டா?

தான் இறக்கும் போது ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் என்று சூளுரைத்து பௌத்தத்தைத் தழுவிய டாக்டர் அம்பேத்கர், இந்து மதக் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் ஈவிரக்கமின்றிச் சாடியவர். இந்து மதத்திற்கு எதிராகக் களமாடிய அம்பேத்கரைக் கொண்டாட இந்துத்துவவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பி 14.04.2021 அன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற பாஜக-வினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஓட ஓட விரட்டி அடித்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக-வினருக்குத் தகுதி இருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன். அவரது விரிவானக் காணொளி இதோ.... 

நன்றி: Arakalagam tv


Wednesday 14 April 2021

எடப்பாடியின் தாயாரை அ.ராசா இழிவுபடுத்தினாரா?

தேர்தல் பரப்புரையின் போது எடப்பாடியின் தாயாரை திமுக-வின் அ.ராசா இழிவுபடுத்தினாரா? 

சோனியாவை ஜெர்சி பசுனு சொன்னது யாரு ? பொள்ளாச்சி சம்பவம் மோடி பதில் சொல்வாரா?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் தெளிவுபடுத்துகிறார்.


நன்றி-Arakalagam tv