தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்திருப்பது தூத்துக்குடி மக்களிடம் மட்டுமல்ல தமிழக மக்களிடையேயும் ஓர் அதிர்ச்சிப் பேரலையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மோடியும் எடப்பாடியும்தான் முக்கியக் காரணம் என்றாலும்கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல என்பதை அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்.
நன்றி: Arakalagam