Wednesday 28 October 2020

திருமா மீது வழக்கு: சென்னை வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை இரத்து செய்ய வேண்டும். 

வெட்டிச் சிதைக்கப்பட்ட காணொளியைப் பரப்பி  பொய் வழக்குப் போட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக வழக்குரைஞர் சங்கம் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றம் வாயிலில்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் பாரதி தலைமை தாங்கினார்.  வழக்குரைஞர்கள் கண்டன உரை ஆற்றினர்.

இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலர் மில்டன் கண்டன உரையாற்றினார். PRPC வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை




No comments:

Post a Comment