தூத்துக்குடியை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய 100 நாள் போராட்டத்தில் அன்றைய எடப்பாடி அதிமுக அரசு காவல்துறையை ஏவி போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை படுகொலை செய்தது.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டிய காவல்துறையினரை சாட்சிகளாகவும், சாட்சிகளாக இருக்க வேண்டிய பொதுமக்களை குற்றவாளிகளாகவும் சிபிஐ யின் புலனாய்வு அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் புதிய புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.
No comments:
Post a Comment