Thursday 25 August 2022

அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை: தூங்குகிறாரா முதல்வர் மு க ஸ்டாலின்?

"திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றப்பட்டார், அவருக்குத் தெரியாமல் நடந்து விட்டது" என்பது அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகநி ர்வாகத்தில், குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கருவறை தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் இந்த வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது .

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முழுப் பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் ஏற்க வேண்டும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பினால் அனைத்து சாதியினரும் எல்லா இந்து கோயில்களிலும் அர்ச்சராக முடியாது. இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பிற அதிகாரிகளுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக பதவி விலக வேண்டும்.

இத்தகைய மோசமான தீர்ப்புக்குப் பின்னால் உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களின் அலட்சியம் மற்றும் அதிகாரிகளின் அக்கறையற்றத் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சா.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!!

அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை என்பது தமிழ் மக்களின் தன்மானப் பிரச்சனை. தமிழகம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் மீண்டும் மீண்டும் பார்ப்பனியமே கோலோச்சும்.


Thanks:arakalagam


No comments:

Post a Comment