Sunday 26 March 2023

சனாதனத்திற்கு எதிராக மதுரையில் கருத்தரங்கம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் சார்பில் 25.03.2023 அன்று மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சனாதனம்-அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை மறுப்பு-ஸ்டெர்லைட் அநீதி என்ற கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தின் மூன்று கோணங்களை விளக்கித் தலைவர்கள் உரையாற்றினர். 

கார்ப்பரேட் அதானி - காவி ஆர் எஸ் எஸ்-ஐ காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், அதன் பிறகு நடைபெற்று வரும் பின் விளைவுகளைப் பார்க்கும் போது, நீதித்துறையில் நிலவும் காவி மயத்தையும் எதிர்க்காமல் இனி அரசியல் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டது. 

பேச்சாளர்கள்-பங்கேற்பாளர்கள், நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த மதுரை கிளைச் செயலர் லயனல் அந்தோணிராஜ் தோழருக்கும், தலைவர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் செயற்குழுவிற்கும் நன்றி!

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்







தோழர் சீனிவாசன்

தோழர் இராமசாமி

தோழர் வாஞ்சிநாதன்

தோழர் மருதையன்

தோழர் லயனல் அந்தோனிராஜ்









No comments:

Post a Comment