Sunday 26 March 2023

சங்கிகளுக்கு ஆதரவாக மதுரை கரிமேடு காவல்துறை!

ஜீ-க்களுக்கு ஆதரவாக மதுரை கரிமேடு காவல்துறை! 

காவல்துறை நிர்வாகத்தில் கோட்டைவிடும் மதுரை திமுக அமைச்சர்கள் -  நிர்வாகிகள்!

 ***"*

மதன் இரவிச்சந்திரன்-வெண்பா கூட்டணி வெளியிட்ட வீடியோக்களில் சிக்கியவர் மதுரை திருமாறன் ஜீ.

தென் இந்திய பார்வர்டு பிளாக் என்ற பெயரில் செயல்படும்  ஆர் எஸ் எஸ்- பா ஜ க- வின் நபர்தான் இந்தத் திருமாறன். திராவிட இயக்கங்களைக் கொச்சையாகப் பேசுவது, கலைஞர், கனிமொழி, பிடிஆர்-ஐ அவதூறாகப் பேசுவது என்ற வகையில் செயல்படும் மதுரை "அர்ஜூன் சம்பத்" தான்  இந்த ஜீ.

மதுரையின் முக்கிய இணையதள ஊடகமான "அறக்கலகத்தை" நடத்தி வருபவர் தவம். சமத்துவம், சமூக நீதி, மத வெறி எதிர்ப்பு என்ற வகையில் அறக்கலகத்தை, தனது கடும் உழைப்பில் கட்டமைத்துக் கொண்டவர் ஊடகவியலாளர்  தவம். சில நாட்களுக்கு முன் திருமாறன் அம்பலமானது தொடர்பாக, வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேட்டி எடுத்து அறக்கலகத்தில் வெளியிட்டுள்ளார் தவம். மேலும் மேலும் அம்பலமானதால், எரிச்சலான ஜீ-  மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முற்றுகை போராட்டமும் நடத்தியுள்ளார். உடனே, மிரண்ட கரிமேடு காவல் உதவி ஆணையர் மகேஷ், ஆய்வாளர்  இத்ரிஷ்  முகமது ஆகியோர், வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கும், அறக்கலகம் தவத்திற்கும் நேற்று (மார்ச்,21, 2023) மதியம் 3 மணிக்கு சம்மன் கொடுத்து, 5 மணிக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர். கைது செய்யும் சூழலும் இருந்தது. வழக்கறிஞர்கள் தலையிட்டு கேட்ட பின்பு, தவத்தை தொடர்பு கொண்ட உதவி ஆணையர் மகேஷ், திருமாறன் தொடர்பான இரண்டு வீடியோக்களை உடனே நீக்குமாறு நெருக்கடி கொடுத்து நீக்க வைத்துள்ளார். தி.வி.க. மணி அமுதன், திருமாறன் தொடர்பாக கொடுத்த பேட்டியையும் நீக்கச் சொல்லுங்கள் எனச் சொல்லியுள்ளார். இப்போதுவரை திருமாறன் போட்டோவை எடுங்கள், தலைப்பை மாற்றுங்கள் எனப் பேசி நெருக்கடி தருகிறார் ஆய்வாளர் இத்ரிஷ். மதுரை காவல்துறையின் இச்செயல்பாடு தொடர்பாக எமக்கு எழும் கேள்விகள்.

1. அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, உரிமையை நசுக்க முயற்சிப்பதன் பின்னணி என்ன?

2.ஒரு நபர் குறித்து அவதூறான கருத்துக்களைச் சொன்னால், சம்மந்தப்பட்ட நபர் (திருமாறன்), பேசிய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மீது அவதூறு வழக்குத் தொடர்வதுதான் உரிய சட்ட நடைமுறை, இதனை அறிவுறுத்த வேண்டிய காவல்துறை சட்டமீறலில் ஈடுபட்டது ஏன்?

3.அறக்கலகம் தவத்திற்கு தொடர் நெருக்கடி கொடுத்து பேட்டியை நீக்க வைத்த கரிமேடு காவல்துறை, மதன் இரவிச்சந்திரன் வெளியிட்ட, தினமும் வெளியிடும் வீடியோக்களை நீக்கச் சொல்லுமா, தடுக்குமா?

4.அறக்கலகம் முகப்பிலேயே, பேட்டியளிக்கும் நபரின் கருத்துக்கும், தனக்கும் தொடர்பில்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டு பேட்டிகளை ஒளிபரப்பும் தவத்தை மிரட்டியதுபோல், ஹிந்து, தினமலர், தினகரன், நக்கீரன் போன்ற ஊடகங்களை மிரட்டுமா காவல்துறை?

5.திருமாறன் என்ற நபர் தி.க.வை, திமுக.வை, கலைஞரை, ஸ்டாலினை, கனிமொழியை, பி டி ஆர் - யை, மிகக் கேவலமாக, ஆபாசமாகப் பேசிய வீடியோக்கள் எத்தனையை நீக்கச் சொன்னது காவல்துறை?  வழக்குப் பதிந்தது உண்டா?

6.திமுக என்ற கட்சி ஆட்சியில் இருப்பதற்கு சமூக நீதிக் கருத்தியலை மக்களிடம் தினமும் கொண்டு சேர்க்கும் யூ டியூப் சேனல்களின் பங்கு குறித்து அறிவார்களா மதுரை திமுக நிர்வாகிகள்?

இறுதியாக,

7.மதுரை கரிமேடு காவல்துறை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ஆர் எஸ் எஸ் - பா ஜ க - கட்டுப்பாட்டில் உள்ளதா?

சரியான நடவடிக்கை இல்லாவிட்டால் மதுரையின் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் விரைவில் வருவோம் கரிமேடு காவல் நிலையத்திற்கு.

சே.வாஞ்சிநாதன்
வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மார்ச்.22, 2023.





No comments:

Post a Comment