நண்பர்களே,
"நிவர் புயல்" - பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே கொரானா மீட்பு பணியில் ஈடுபட்ட சென்னை மக்கள் உதவிக்குழு, வடசென்னை மக்கள் உதவிக்குழு, வியாசை தோழர்கள் உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதற்கட்டமாக நமது தோழர்கள் வசிக்கும் பகுதிகள் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவது என்றும் குறிப்பாக வியாசை மற்றும் வடசென்னை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஒருங்கிணைக்கும் வகையில் 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
PS, NN, Sarath ஒருங்கிணைக்க பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளனர்.
*உடனடியாக திட்டமிட்ட வேலைகள்*
1. அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது,
2.அத்தியாவசியமான நிவாரண உதவிகளை வழங்குவது
3. உதவி எண்கள் அறிவிப்பது
4. உதவிப்பணிகளுக்கு நிதி திரட்டுவது
5. நாளை காலை 9 மணிக்கு கள ஆய்வு செய்வது,
என்ற வகையில் தற்போது திட்டமிட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலைமைகளையொட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல்
No comments:
Post a Comment