Tuesday 15 September 2020

இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித் தொகை!

இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை !

BAR council Chairman அவர்களைச் சந்தித்து நன்றி அறிவிப்பு!!

சென்னையில் அரசு சட்டக்கல்லூரி !

BAR council Chairman உறுதி!!

AIBE தேர்ச்சி பெறாதவர்களுக்கும் COVID உதவித்தொகை தர நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை இளம் வழக்குரைஞர்கள் சார்பாக 176 இளம் வழக்குரைஞர்கள் ஆதரவோடு பார்கவுன்சிலுக்கு 18.04.2020 & 24.05.2020 அன்று இரண்டு மனுக்கள் அளித்திருந்தோம்.

அம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது AIBE தேர்வாகாத வழக்குரைஞர்களுக்கும் சென்ற வாரம் முதல் 4000 ரூபாய்க்கான Cheque வழங்கப்பட்டு வருகிறது.

BAR council ன் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 3.30 மணிக்கு BCTNP Chairman திரு. அமல்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தோம்.

நாம் சென்ற விஷயத்தை தெரிந்துகொண்ட பின், "உண்மையில் உங்களது மனுக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள வழக்குரைஞர்களுக்கு என்னால் இதனைச் செய்ய முடிந்தது." என்று வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவரது வார்த்தைகள் நம்முடைய உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக இருந்தது.

பிறகு Chennai Young Advocates செயல்பாடுகளான Physically Challenged PIL, Manual Scavengil PIL, Legal Seminars போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டோம். நமது செயல்பாடுகள் மிகுந்த மகிழச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

Chennai Young Advocates குழுவிலுள்ள மூவர் (Thilagavathy, Singaravelan, Sarathkumar) University Gold Medal வாங்கும்பொழுது மேடையில் அவரிடம் வாழ்த்து பெற்றதை நினைவுகூர்ந்து மகிழ்ந்தார்.

நாம் சென்னை சட்டக் கல்லூரிக்குள் 16 நாட்கள் தங்கி போராடியதையும், அதன்பின் இடமாற்றத்தை மையப்படுத்தி நீதியரசர் திரு.ஹரிபரந்தாமன் அவர்களை அழைத்து பார்கவுன்சில் கட்டிடத்தில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தியதை நினைவு படுத்தியதோடு, புதுப்பாக்கம் சட்டக்கல்லூரி பொங்கல் தினத்தில் சென்னையில் சட்டக்கல்லூரி மீண்டும் கொண்டுவரப்படும் என பேட்டியளித்தது எங்களுக்கு மிகுந்த மன நிறைவாக இருந்ததென பகிர்ந்து கொண்டோம்.

சட்டக் கல்லூரிக்காக நாம் நடத்தியப் போராட்டத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார். அதன் பின் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.

பிறகு, "எனது பதவிக்காலம் முடிவதற்குள் சென்னையில் நிச்சயம் அரசு சட்டக்கல்லூரி கொண்டுவரப்படும்" என்று உறுதியளித்தார்.

மேலும், மாவட்டந்தோறும் சட்டக்கல்லூரி திறக்கப்பட BAR Council தீர்மானம் நிறைவேற்றி, 09.09.2020 அன்று தமிழக அரசிடம் அளித்த மனுவினை கொண்டுவரச்சொல்லி நம்மிடம் காண்பித்தார்.

உதவித்தொகை வழங்கப்பட்டதை விட இந்தத் தகவல்கள்தான் உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்பதை பகிர்ந்து கொண்டோம்.

பின்பு, நமது செயல்பாடுகளை அங்கீகரித்து, இளம் தலைமுறையினர் இப்படி சமூக உணர்வோடு செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறி, சென்னை இளம் வழக்குரைஞர்களுக்கு தமது பாராட்டுதலைத் தெரிவித்தார்.

இறுதியாக, இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்த Bar Council Chairman அவருக்கும், இதர Bar Council உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து, நாம் கொண்டு சென்ற நன்றி அறிவிப்புக் கடிதத்தை கொடுத்து வந்தோம்.

தொடர்ந்து பணியில்...

தகவல்

சென்னை இளம் வழக்குரைஞர்கள்

#Chennai_Young_Advocates

தொடர்ந்து உற்சாகமாக வேலை செய்யும் இளம் வழக்கறிஞர்களை வாழ்த்துகிறோம்! 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

No comments:

Post a Comment