Tuesday, 22 September 2020

வழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலிலிருந்து வழக்குரைஞரை நீக்குவதா?

ஒரு வழக்குரைஞர் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலே அந்த  வழக்குரைஞரை, வழக்குரைஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாம் என தமிழ்நாடு பார் கவுன்சிலின் முடிவை எதிர்த்துத் தமிழக வழக்குரைஞர்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

பென்னாகரம்

வழக்குரைஞர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தொழில் தடை செய்யலாம் என்ற தமிழ்நாடு பார் கவுன்சிலில் நடவடிக்கையை கண்டித்து பென்னாகரம் வழக்குரைஞர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டம்!


கோவில்பட்டி

வழக்குரைஞர் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்கம்

22-09-2020 (JAAC தீர்மானத்தின்படி) தமிழ்நாடு பார்கவுன்சில் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் உடனடியாக இடை நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற  வலியுறுத்தி கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாபெரும் ஆர்பாட்டம்!


கோவை

வழக்குரைஞர் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- கோவை வழக்குரைஞர்கள் சங்கம்

22-09-2020 (JAAC தீர்மானத்தின்படி) தமிழ்நாடு பார்கவுன்சில் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் உடனடியாக இடை நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற  வலியுறுத்தி கோயமுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


ஈரோடு

வழக்குப் பதிந்தாலே பார் கவுன்சிலில் இருந்து நீக்குவதா? -நீதிமன்ற வளாகத்தில் ஈரோடு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க பொதுக்குழு முடிவின்படி, ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் அசோசியேஷன் சார்பில் இன்று (22.09.2020) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு வழக்குரைஞர்கள் அசோசியேஷன் தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், "வழக்குரைஞர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தாலே, பார் கவுன்சிலில் இருந்து நீக்கி விடுகின்றனர். ஆகையால், வழக்குரைஞர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே, இனி பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்நது, வழக்குரைஞர்கள் அசோசியேஷனை சேர்ந்த வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

- நக்கீரன், 22/09/20



No comments:

Post a Comment