Sunday 23 May 2021

மூன்றாமாண்டிலும் தொடரும் தூத்துக்குடி மக்களின் கோபக் கனல்!

ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 2018 , மே 22 அன்று தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செரிந்த போராட்டத்தில் களப்பலியான தியாகிகளின் நினைவுகளை மூன்று ஆண்டுகள் கடந்த போதும் அம்மக்கள் தங்கள் நெஞ்சங்களில் சுமக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்வரை தூத்துக்குடி மக்கள் ஓயப்போவதில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் மே 22 அன்று தியாகிகளின் மூன்றாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டங்கள் தூத்துக்குடி எங்கும் நடைபெற்றது.

அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

கரோனாவைவிடக் கொடியது ஸ்டெர்லைட்

*வீட்டிலிருந்தபடியே உலகளாவிய இணையவழி தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம்*
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்களின் இயக்கம் தூத்துக்குடியில் நீதிக்காக மே 12 முதல் 22 வரைக்கும் ஒரு உலகளாவிய பட்டினி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பொதுநலனில் அக்கறையுள்ள அனைத்து மக்களையும், அமைப்புகளையும் மே 22- ஆம் தேதியை- ஸ்டெர்லைட் படுகொலையின் நினைவு நாளை- வேதாந்தா மற்றும் பெரு நிறுவன குழுமங்களின் குற்றங்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் தினமாக கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி இன்று (21-05-2021) நாங்கள் (நானும் - எனது மனைவியும் கொரானோ பாசிடிவ் மே-10 லிருந்து வீட்டிலேயே தனிமைபடுத்துதலில் இருக்கிறோம்) மதியம் மட்டும் உணவருந்தாமல் இருந்தோம்.
தமிழக அரசே!
நீர் நிலம் காற்றை நாசப்படுத்திய குற்றத்திற்காக ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர்அனில் அகர்வால், நிறுவன அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் நடவடிக்கை எடுத்திடு!
கெ.அரி ராகவன் & சத்தியபாமா
முத்தம்மாள் காலனி
தூத்துக்குடி
கரோனா பாதித்த நிலையிலும் போராட்டக் களத்தில் வழக்குரைஞர் அரிராகவன் மற்றும் அவரது இணையர்

வேலை கொடுத்தமைக்கு நன்றி! அதே நேரத்தில் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை!

தமிழக முதல்வருக்கு...
நன்றி!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தூத்துக்குடி மற்றும் 7 கோடி தமிழக மக்களின் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. ஸ்டெர்லைட் உரிமையாளர், நிர்வாகத்தின் மீது நீர், நிலம், காற்றை மாசுபடுத்திய குற்றத்திற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
3) மே-22ல் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவித்திட வேண்டும்!
நினைவிடம் அமைத்திட வேண்டும்!
4) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
5) நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்!
6) சுட்டுக்கொலை செய்த காவல்துறை/வருவாய் துறை உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்!
7) பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் வாங்ககப்பட வேண்டும்!
முதல்வர் ஸ்டாலின் (மே-21) இன்று நிறைவேற்றிய கோரிக்கைக்காக குரல் கொடுத்த, இன்னும் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கோரிக்கைகளுக்காக போராட்டம், ஆதரவு குரல் எழுப்பி வரும் அனைத்துக் கட்சிகள் (பாஜக தவிர), இயக்கங்கள், சங்கங்கள், சக தோழமை ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளுக்கும், அதன் தலைமைகளுக்கும், நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
*ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு*
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 989457481

ஆலையை மூடக்கோரி கூட்டாக அறிக்கை
பத்திரிக்கை செய்தி:
தமிழக முதல்வருக்கு கோரிக்கை:
1. ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்துப்பேசி தூத்துக்குடி ஆலையை அகற்றிக் கொள்ள வலியுறுத்த வேண்டும் (இல்லையேல்)
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அமர்வில் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்!
2. தூத்துக்குடி போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவிக்க வேண்டும்!
3. சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது!
4. தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ்பெற வேண்டும்!
5. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் "ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம்" என அறிவித்திருந்தார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. "ஸ்டெர்லைட்டை திறக்கவிட மாட்டோம்" என்ற முதல்வரின் கருத்துதான், ஒட்டுமொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்களின் கருத்து.
நச்சாலை ஸ்டெர்லைட் இனி தமிழகத்திற்கு வேண்டாம் என்பதில் தூத்துக்குடி மக்கள், தமிழக மக்கள், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கத்தினர் உறுதியாக உள்ளனர். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற வழக்குகள், அடுத்தடுத்து இடைக்கால மனுக்கள் என்று, எப்படியாவது மீண்டும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க வேண்டும் எனக்கருதி பல கோடிகள் செலவு செய்து வருகிறது. தற்போது உயிர் காக்கும் ஆக்ஸிஜன் 1050 மெட்ரிக் டன் தினமும் வழங்குகிறோம் என்று சொல்லி 10, 15 மெட்ரிக் டன்னுக்கே தடுமாறி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் புற்று நோயில் மடிந்தும், பல முறை விசவாயு கசிந்தும், 2018 மே-22 அன்று 15 பேரின் உயிரைக் குடித்த பின்பும் மீண்டும் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் முயற்சிப்பது 7 கோடித் தமிழர்கள், தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளை வெளிப்படையாக அவமதிப்பதாகும். தமிழக மக்களின் சுயமரியாதையை சீண்டுவதாகும். மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் அமைந்த வேதாந்தா தாமிர உருக்காலையை பாஜக, சிவசேனா கட்சியினரும், மக்களும் உடைத்தெறிந்தனர். அவ்வாலை மூடப்பட்டது. ஆனால் தமிழக மக்கள் சட்டம், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து 24 ஆண்டுகளாக நீதிமன்றப் படியேறி வருகின்றனர். இதைப் புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தானே ஆலையை அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தபடி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வரே பேச்சு வார்த்தை நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி விட்டால் தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும் என்றென்றும் அதற்கு நன்றியுடன் இருப்பர். திராவிட இயக்க வரலாறும் இதைப் பதிவு செய்யும். ஸ்டெர்லைட் நிர்வாகம் இதற்கு உடன்படாவிட்டால், விதிகளை மிக நீண்ட காலம் மீறி சுற்றுச் சூழலை நாசம் செய்த குற்றத்திற்காக உரிய கிரிமினல் வழக்குகள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடரப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
*ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொது அமைதி கெட்டு சுமார் 300-க்கும் மேலான வழக்குகள், பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசம், ஏராளமான மனித உயிர்கள் பலியாகி உள்ளதை கணக்கில் கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133- ன் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆலையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிடலாம்.*
தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் மட்டுமே வேதாந்தா நிறுவனத்தை பின்வாங்கச் செய்யும். உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றாலும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க முடியாது என்று கருதச் செய்யும். எனவே இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்படும் தூத்துக்குடிப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு நாளான மே-22 அன்று தமிழக முதல்வர் ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான அறிவிப்புகளைச் செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.
-----------------------------------------
சே. வாஞ்சி நாதன். வழக்கறிஞர்.
சட்ட ஆலோசகர்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
384, கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20. தொடர்பு கொள்ள:
98653 48163

நினைவஞ்சலிக் கூட்டங்கள்

தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் இன்று (மே-22) ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு பொதுமக்கள், மக்கள் கூட்டமைப்பு, கட்சிகள், இயக்கங்கள் சார்பில், செலுத்தப்பட்ட நினைவஞ்சலி புகைப்படங்கள்:


















தூத்துக்குடி எங்கும் எதிரொலித்த முழக்கங்கள்
வீரவணக்க முழக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
மண்ணை காத்த
மாவீரர்களே...
உங்களுக்கு எங்கள்
வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
மக்களைக் காத்த
தியாகிகளே...
உங்களுக்கு எங்கள்
வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
தூத்துக்குடியின் போராளிகள்
ஸ்நோலின், தமிழரசன்...
ரஞ்சித், ஜெயராமன்...
மணிராஜ், ஜான்சி...
கந்தையா
அந்தோணி செல்வராஜ்...
கார்த்திக், காளியப்பன்...
சண்முகம், கிளாஸ்டன்...
செல்வசேகர், பரத்ராஜ்...
ஜஸ்டினுக்கு வீரவணக்கம்!
விடமாட்டோம்! விடமாட்டோம்!
ஸ்டெர்லைட்டை விரட்டி அடிக்காமல்...
விடமாட்டோம்! விடமாட்டோம்!
விஷத்தை கக்கும் வேதாந்தாவை...
விரட்டி அடிக்காமல் விடமாட்டோம்!
உங்கள் கனவை நிறைவேற்றாமல்...
விடமாட்டோம்! விடமாட்டோம்!
அறிவித்திடு! அறிவித்திடு!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளை...
ரத்தம் சிந்தி உயிர்நீத்த...
எங்கள் வீட்டு செல்வங்களை
சுற்றுச்சூழல் தியாகிகளாக...
அறிவித்திடு! அறிவித்திடு!
எங்களைக் காத்த குல சாமிகளுக்கு...
எம் சந்ததியை காத்த தெய்வங்களுக்கு... நினைவுச்சின்னம் அமைத்திடு!
வழக்குப் பதிவு செய்து, கைது செய்..!
நீர், நிலம், காற்றைக் கெடுத்த
அனில் அகர்வாலை கைது செய்..!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி
வேதாந்தாவின் நிர்வாகிகளை...
கைது செய்து சிறையிலடை!
தீர்ப்பு எதுவந்தாலும்,
உச்சநிதிமன்ற தீர்ப்பு
எது வந்தாலும்...
பெருவீதத் தாமிர தொழிலை...
தமிழகத்தில் அனுமதியோம் என...
அமைச்சரவையை கூட்டி
கொள்கை முடிவெடுத்து...
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை அகற்று!
தமிழக அரசே!
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை அகற்று!
*ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு*
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817

இணைய வழிக் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 22.05.2021 அன்று காலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாமாண்டு நினைவஞ்சலி இணையவழிக் கூட்டம் நடைபெற்றது வழக்குரைஞர் மில்டன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்

நீதிபதி து.ஹரிபரந்தாமன் (ஓய்வு)* சென்னை உயர்நீதிமன்றம்
வழக்கறிஞர் திரு. பாலன்அரிதாஸ்* சென்னை உயர்நீதிமன்றம்
திரு. ஆளூர் ஷாநவாஸ் (வி.சி.க.)* சட்டமன்ற உறுப்பினர்
திரு. சுந்தராஜன்* பூவுலகில் நண்பர்கள்
திரு. செந்தில்வேல்* ஊடகவியலாளர்
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்* மாநில ஒருங்கிணைப்பாளர், PRPC
நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
மேலும், துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினர், போராட்ட முன்னணியாளர்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரான...
*திரு.பூவையா என்ற JP* தெற்கு வீரபாண்டியபுரம்
*திருமதி.ஜெனரோஸ்*
பாத்திமா நகர்
*திரு.அ. முருகன்*
குமரெட்டியாபுரம்
*திருமதி.க.வசந்தி*
பண்டாரம்பட்டி
*திரு.மணி*
பெரியநாயகிபுரம்
*திரு.சேமா சந்தணராஜ்*
முத்தையாபுரம்
*திருமதி. சிம்லா*
மடத்தூர்
*திரு.ஹான்ஸ்*
புதுத்தெரு
*சகோதரி.பியூட்லின்*
திரு நங்கை, தூத்துக்குடி
*திரு.மைக்கேல் அண்டோ ஜூனியஸ்*
ராஜபாளையம்
*திரு.A.S.முத்து*
மீளவிட்டான்த்தை நினைவு கூர்ந்தனர்.

தூத்துக்குடியில் கணன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பு ஸ்டெர்லைட்டை எரிக்காமல் அணையாது.

செய்தித் தொகுப்பு
பொன்.சேகர்

No comments:

Post a Comment