Monday 31 May 2021

பத்ம சேஷாத்ரி: சுப்பிரமணிய சாமியின் திமிர் பேச்சு!

சென்னை, பத்ம சேஷாத்ரி பள்ளி மீது மாணவிகள் தரப்பிலிருந்து பாலியல் புகார் எழுந்ததையொட்டி ராஜகோபால் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி அப்பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுத்தால் திமுக ஆட்சியைக் கலைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி. அவர் இவ்வாறு பேசியது சட்டப்படி தேசத்துரோகக் குற்றமாகும். இந்த விவகாரம் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் விரிவான காணொளி பாருங்கள். பகிருங்கள்!

நன்றி: Arakalagam tv


No comments:

Post a Comment