Showing posts with label prpc. Show all posts
Showing posts with label prpc. Show all posts

Friday, 11 August 2023

ஆடையில்லாமல் பெண்களை இழுத்துச் சென்றது நியாயமா? ஸ்மிருதி ராணியே பதில் சொல்!

பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டும் ஸ்மிருதி இராணியே,  மணிப்பூரில் பெண்கள் ஆடையில்லாமல் இழுத்துச் செல்லப்பட்டதற்கு பதில் என்ன?? பாஜககாரர்கள் தேச பக்தர்கள் அல்ல, தேசத் துரோகிகள்!!! 

அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள். 

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்  ஒருங்கிணைப்பாளர் - PRPC TN

நன்றி: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌arakalagamtv 



Tuesday, 27 June 2023

3500 ஆண்டுகால பார்ப்பனிய சனாதன ஆதிக்க எதிர்ப்பு: கருத்தரங்கம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பில்

பார்ப்பனிய சனாதன ஆதிக்க எதிர்ப்பு: 3500 ஆண்டு கால விடுதலைப் போர் "

என்ற தலைப்பில், 25.06.2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரையில்  ஹோட்டல் பியர்ள்ஸ்  அரங்கில் நடந்த கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேராசிரியர் அ.கருணானந்தன்  அவர்களின் சிறப்புரை, அரங்கக்  கூட்டத்தை ஒரு வரலாற்றுக்கான வகுப்பறையாக மாற்றியது. பார்ப்பனியத்தின் 3500 ஆண்டுகால ஆதிக்க வரலாற்றையும், ரிக் வேதகால புரட்டுக்களையும், ஆரிய இனக்குழுக்கள் இடையே ஏற்பட்ட வேலைப்  பிரிவினைகளைப்  பிற்காலத்தில் வர்ணங்களாக மாற்றி, ஆரியர் அல்லாதவர்களைச்  சூத்திரர்கள் ஆக்கிய சதிகளையும் தோலுரித்துக் காட்டியதோடு, பார்ப்பனிய சித்தாந்தத்துக்கு  எதிராக எழுந்த இயக்கங்களையும், பின்னர்  பௌத்தம், சமணம் நடத்திய கருத்தியல் போராட்டங்களையும் விளக்கி  அவர்  ஆற்றிய ஆழமான  உரை பலருக்கும் புதிய செய்திகளைக்  கொண்டு சேர்த்தது.

மக்கள் உரிமைப்  பாதுகாப்பு மையத்தின் மாநில  ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், சனாதனத்தை வீழ்த்துவதற்கான வழிமுறைகள் பற்றியக்  கேள்விகளை எழுப்ப, ம. உ. பா. மையத்தின் மதுரை  மாவட்டத்  தலைவர் பேராசிரியர் அ.சீநிவாசன் தமிழ்ச் சமூகத்தில்  தொல்காப்பியர் காலத்திலேயே பார்ப்பனியம் வேர் விடத்தொடங்கிய வரலாற்றை இலக்கியச் சான்றுகளோடு முன்வைக்க, பொருளாளர், எழுத்தாளர்  தோழர் மு.சங்கையா பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டுமானால் அதற்கு எதிராக சமத்துவம், சமூக நீதிக் கோட்பாடுகளை  ஒரு கருத்தியல் ஆயுதமாக்கிக்  களம் காண வேண்டிய அவசியத்தை விளக்கினார். அரசியல் அதிகாரத்தைக்  கைப்பற்றாமல்  சனாதனத்தை, பார்ப்பனியத்தை வீழ்த்த முடியாது என்றார்.

அதன் பின்னர் பார்வையாளர்கள் அறிவார்ந்த கேள்விகளை  எழுப்ப அவற்றிற்கு பேரா.கருணானந்தன் அவர்கள் விளக்கம் அளித்தார்.   நிகழ்ச்சியைத்  தொய்வின்றி தொகுத்தளித்த  மாவட்டச் செயலர் தோழர் லயனல், காவி பாசிசத்திற்குக் கருத்தியல் ரீதியான சவாலாக இருக்கும் தமிழ்நாட்டைக்  குறி வைத்துத் தீவிரமாகத் தாக்கும் இந்தச்  சூழலில் சனாதானத்தை எதிர்க்கின்ற அனைவரும் ஓரணியில் நின்று தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர்  நன்றி கூறலுடன்  கூட்டம் இனிதே நிறைவுற்றது .

மொத்த நிகழ்ச்சியும் PRPC TN முக நூலில் ஒளி  பரப்பப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் அதைப்  பார்த்து வருகின்றனர்.

தகவல்

லயனல்

பேரா. அ.கருணானந்தன் 


லயனல்

மு.சங்கையா

பேரா.சீனிவாசன்

வாஞ்சிநாதன்






Sunday, 26 March 2023

சனாதனத்திற்கு எதிராக மதுரையில் கருத்தரங்கம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் சார்பில் 25.03.2023 அன்று மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சனாதனம்-அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை மறுப்பு-ஸ்டெர்லைட் அநீதி என்ற கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தின் மூன்று கோணங்களை விளக்கித் தலைவர்கள் உரையாற்றினர். 

கார்ப்பரேட் அதானி - காவி ஆர் எஸ் எஸ்-ஐ காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், அதன் பிறகு நடைபெற்று வரும் பின் விளைவுகளைப் பார்க்கும் போது, நீதித்துறையில் நிலவும் காவி மயத்தையும் எதிர்க்காமல் இனி அரசியல் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டது. 

பேச்சாளர்கள்-பங்கேற்பாளர்கள், நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த மதுரை கிளைச் செயலர் லயனல் அந்தோணிராஜ் தோழருக்கும், தலைவர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் செயற்குழுவிற்கும் நன்றி!

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்







தோழர் சீனிவாசன்

தோழர் இராமசாமி

தோழர் வாஞ்சிநாதன்

தோழர் மருதையன்

தோழர் லயனல் அந்தோனிராஜ்









Tuesday, 7 February 2023

நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகள் நியமனமும்!-----இனி?

நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகள் நியமனமும்....இனி?  

என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கம் ரிப்போர்ட்டர் கில்டு அரங்கில் 05.02.2023 அன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் நீதிபதி D.அரி பரந்தாமன் (ஓய்வு),  இரா. வைகை,  மூத்த வழக்கறிஞர், S.வாஞ்சிநாதன், வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் மில்டன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. 

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். (PRPC)









Sunday, 19 December 2021

"சாதி எனும் பெரும் தொற்று!" - நூல் திறனாய்வு!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை கிளையின் பொருளாளர் தோழர் சங்கைய்யா அவர்கள் எழுதிய "சாதி எனும் பெரும் தொற்று - தொடரும் விவாதங்கள்" நூல் திறனாய்வுக் கூட்டம் 18.12.2021, சனிக்கிழமை மாலை மதுரை மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது.

கிளைத் தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் அவர்கள் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் நோக்க உரை நிகழ்த்தினார்.

சாதி என்பது தொற்றாக மட்டுமல்லாமல், சமூக சமத்துவத்தைக் கொல்லும் பயங்கர நோயாக உள்ளது என்பதை நூலின் அடி ஆழம் வரை சென்று நூலில் விரவிக் கிடக்கும் ஆதாரங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக விளக்கினார் நூல் திறனாய்வாளர் முனைவர் ந.முருகேசன் அவர்கள்.

அதன் பிறகு, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நூலாசிரியரும்  கருத்தாளர்களும் விளக்கமளித்தனர். நூலாசிரியர் சங்கையா அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. 50க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். TN-PRPC முகநூலில் இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதுவரை சங்கையா அவர்கள் எழுதிய ரூ 675 மதிப்புள்ள மூன்று நூல்கள் ரூ.450க்கு அரங்கில் விற்பனை செய்யப்பட்டன.





தகவல் 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை கிளை
73393 26807


Saturday, 6 March 2021

விவசாயிகள் போராட்டம்! 100 - வது நாள்: திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி

அன்பார்ந்த வழக்கறிஞர்களே, பொதுமக்களே,

மக்களின் உணவு உண்ணும் உரிமைக்காக டில்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக பன்னாட்டு நிறுவனங்களின் கைக் கூலி மோடி - பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை ஆதரித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 06.03.2021-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருச்சி நீதிமன்ற வாயில் முன்பு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர்கள் போஜக்குமார், ஆதிநாராயணமூர்த்தி, தாஜுதீன், சங்கர், கென்னடி, பானுமதி, பர்சானா, யாசர், சாருவாகன், ராமச்சந்திரன், கலைச்செல்வி, அரிச்சந்திரன், ஜாகீர், கிளர்ச்சியாளன், பிரசாத், சாகுல், ஆனந்தநாராயணன், ஜீவா, வினோத் மற்றும் தோழர்கள் செந்தில், சபி, கார்த்திக் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கார்பரேட் கைக் கூலி மோடி - பா.ஜ.க-வினரையும் ஜால்ரா போடும் எடப்பாடியையும் விரட்டியடிக்க வேண்டுமென்று முழக்கமிட்டனர்.




தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருச்சி 

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் 100-ம் நாளை எட்டி உள்ள நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 06.03.2021 அன்று முன்னெடுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடும் பொருட்டு திருச்சி நீதிமன்றத்தில் 05.03.2021 அன்று பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.



தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருச்சி 

Wednesday, 13 January 2021

முகநூல் நட்புகளுக்கு ஓர் வேண்டுகோள்!

PRPC தோழர்களுக்கு,

நமது முகநூல் தொடர்பாக!

வணக்கம்.  நமது ”மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்” சார்பாக “ *People’s Right Protection Centre, Tamil Nadu”* என்ற பெயரில் சில வருடங்களாக முகநூலில் ஒரு பக்கத்தை (Page) தொடங்கி  தொடர்ந்து பதிவிட்டுவருகிறோம். இதில் மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகள், நமது அமைப்பு பல்வேறு பகுதிகளில் முன்னெடுத்து வரும் மக்கள் பணிகளையும், பொதுநல வழக்கு குறித்த செய்திகளையும், பொதுவான செய்திகளையும் தொடர்ந்து பதிவிட்டுவருகிறோம்.    இதுவரை *13356* பேர் நமது பக்கத்தை பின்தொடர்பவர்களாக ( *Followers* ) இருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாதமும் *இரண்டு லட்சம்* , சில சமயங்களில் *நான்கு லட்சம்* பேருக்கு மேலாக நமது பதிவுகள் சென்றடைகின்றன. 

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால் சங்கிகள் கடுப்படைகிறார்கள். நமது பக்கத்தை முகநூல் நிர்வாகத்திற்கு அவ்வப்பொழுது  புகார் தருகிறார்கள்.   முகநூல் நிர்வாகமும் பதிவுகளின் தன்மை குறித்து எல்லாம் ஆய்வதில்லை.  நாலைந்து பேர் புகார் அளித்துவிட்டால், பதிவுகளை முடக்குவது! நமது பக்கத்தை முகநூலில் இயங்கிவரும் குழுக்களில் பகிர தடை செய்வது, நமது பக்கத்திலேயே பதிவுகள் இட சில நாட்களுக்கு தடை என விதவிதமாய் யோசித்து நம்மை முடக்க நினைக்கிறார்கள். டிசம்பரில் கூட நமது பக்கத்தை சில நாட்களுக்கு முடக்கி வைத்துவிட்டார்கள்.  சில ஏற்பாடுகளை செய்து, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் இயங்க துவங்கியிருக்கிறோம்.  

சங்கிகளின் புகார்கள் மட்டுமல்ல! முகநூல் நிர்வாகமே ஆளும் கட்சியாக இருக்க கூடிய பா.ஜனதா சார்பான நிலை எடுத்து விட்டதாக சமீபத்திய செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.  ஆகையால் நாம் முகநூலில் தொடர்ந்து இயங்கவேண்டுமென்றால், நாம் சில முன்னேற்பாடுகளை செய்யவேண்டியிருக்கிறது.   இனி நமது பக்கத்தில் மட்டும் நமது பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருவது! நாம் அங்கம் வகிக்கும் குழுக்களில் நமது பதிவுகளை பகிர்வது இல்லை என முடிவுக்கு வருகிறோம்.  இப்படி ஒரு முடிவு எடுக்கும் பொழுது, நமது பதிவுகள் பரவலாக சென்றடையாது. ஏனென்றால், நாம் அங்கம் வகிக்கும் குழுக்களில் ஒரு குழுவில் 4000 பேரும் உண்டு. இன்னொரு குழுவில் 70000 பேர் கூட உண்டு.   குழுக்களில் நாம் பகிரும் பொழுது தான் நமது பதிவுகள் பல ஆயிரம் பேரை சென்றடையும். 

ஆகையால், முகநூலில் இயங்கி வரும் தோழர்களிடம் கோருவதெல்லாம், *நாம் போடும் பதிவுகளை தோழர்கள் தங்களது டைம்லைனில் (Share) பகிருங்கள். ஏதாவது குழுவில் இருந்தால், அந்த குழுவிலும் பகிருங்கள்.  அப்பொழுது தான் நமது கருத்துக்கள் மக்களை பரவலாக சென்றடையும்* .   

இப்படி பகிருந்தால், மீண்டும் நம் மீது புகார் தெரிவிக்கமாட்டார்களா என கேள்வி எழுந்தால், வரும். அதை நாம் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்.

வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும், கேளுங்கள். விவாதிப்போம். 

நன்றி.

தோழமையுடன்,

ஜிம்ராஜ் மில்டன்,
வழக்கறிஞர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை.