Thursday 23 July 2020

போராட்டக்களத்தில் தமிழக வழக்குரைஞர்கள்!

அன்புடையீர் வணக்கம்!

22.07.2020 ஆம் தேதி (புதன்கிழமை) நமது கூட்டுக்குழுவின் பொதுக்குழுக்கூட்டம்  மாலை 5 மணியளவில் ' Google Meet' என்ற இணைய வழியாக நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் முன்னாள்  தலைவர் திரு. P. திருமலைராஜன் அவர்களும், முன்னாள் பொதுச்செயலாளரும், பார்கவுன்சில் உறுப்பினருமான திரு. MRR. சிவசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டனர். 

கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலியிலும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெறிவித்துக்கொள்கிறேன். மேற்படி கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை  அமைச்சகம் Dr.Ranbir Singh அவர்கள் தலைமையில் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டுமென்றும்;

2. மேற்படி குழு அமைக்கப்பட்டதற்கு நமது கூட்டுக்குழுவின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையினை அந்தக் குழுவிற்கு அனுப்பிவைப்பதென்றும்; 

3. கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மத்திய அரசு மேற்படி 5 பேர் கொண்ட குழுவினை அமைத்து குற்றவியல் சட்டங்களில் அடிப்படைத் தன்மையை மாற்றி அமைக்கும் விதமாக திருத்தங்கள் கொண்டுவர முற்படுவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டம் நடத்தவேண்டியுள்ள நிலையில், அப்படிப்பட்ட  போராட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தலைவர் தலைமையில் கீழ் கண்ட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. திரு. ப. நந்தகுமார் ( தலைவர், கோவை)

2. திரு. O. சகாபுதீன் ( பொதுச்செயலாளர், திருச்சி)

3. திரு. R. மகேஷ் (பொருளாளர், நாகர்கோவில்)

4. திரு.P. திருமலைராஜன்
(முன்னாள் தலைவர், ஈரோடு)

5. திரு. MRR. சிவசுப்பிரமணியன்
( முன்னாள் பொதுச்செயலாளர்,மற்றும்  பார்கவுன்சில் உறுப்பினர், தஞ்சாவூர்)

6. திரு. V.K. சுப்பிரமணியன்
( துணைத்தலைவர்,  அவினாசி)

7. திரு. தமிழ் இராஜேந்திரன்
 ( அட்வகேட், கரூர்)

8 திரு. கண்ணன்
( துணைத்தலைவர், திருவண்ணாமலை) மற்றும்

9. திரு. செந்தில்குமார்
( துணைத்தலைவர், திருநெல்வேலி 

4. நான்கு மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க வேண்டுமென்றும்,
குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டுமென்றும்,  அதனை வலியுறுத்தும் வகையில்
31.07.2020 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் அந்தந்த நீதிமன்றங்களின் முன்பாக தனி மனித இடைவெளிவிட்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடுத்துவதென்றும்.
ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ப. நந்தகுமார்
தலைவர்
JAAC

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை

No comments:

Post a Comment