Sunday 26 July 2020

அர்ச்சகருக்குக் கொலை மிரட்டல் விடும் பார்ப்பனர்கள்!

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிபெற்ற
மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதனை மிரட்டும்  பார்ப்பனர்கள்!

பத்திரிக்கைச் செய்தி
நாள்: 26.07.2020

கருவறையில் 
தமிழ் நுழைந்தாலும்
தமிழன் நுழைந்தாலும்
பெண்கள் நுழைந்தாலும்
தீட்டாகிவிடும் என பாரப்பனர்கள் இன்றுவரை நம்மை தடுத்து வருகிறார்கள்.

ரத்தம் சிந்தி தமிழர்கள் கட்டி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்
சாதி வேறுபாடின்றி தகுந்த பயிற்சி முடித்த அனைவரும் அர்ச்சகராகலாம் எனக் கோரினால் பார்ப்பனர்கள் ஆத்திரம் அடைகிறார்கள்.

அரங்கநாதன் பேட்டி

அனைத்து சாதியினரும் அரசு அலுவலகங்களில் பணிசெய்வது போன்று ஏன் கோவில்களில் பணி செய்ய முடியாது?  பார்ப்பான் பிறப்பால் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதி இழிவை எப்படி ஏற்க முடியும்?

மூடப்பட்ட அனைத்துசாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்.

பெரிய கோவில்களிலும் பயிற்சி முடித்த மாணவர்களை பணியமர்த்த வேண்டும். என முகநூல், வாட்ஸ்அப் என சமூக ஊடகங்களில்  நாங்கள்  தொடர்ந்து  பிரச்சாரம் செய்வதை  பொறுக்க முடியாத சிலர் போனில்  என்னை மிரட்டுகிறார்கள். கடந்த காலத்தில் ஆட்களை வைத்துத் தாக்கினார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜுலை 24-ம் தேதி காலையில் 9597187410 என்ற எண்ணிலிருந்து தமிழ்நாடு அந்தணர் சங்கத்தில்  இருந்து மாநிலத் தலைவர் பேசுவதாக ஒருவர் பேசினார்.  பிறகு ஒரு மணிநேரம் கழித்து பிராமணர் சங்கத்தில் இருந்து பேசுவதாக 7548815221 என்ற எண்ணிலிருந்து வேறு ஒருவர் பேசினார்.  பெயர் சொல்லவில்லை. “நீங்கள் ஆகம கோவில்களில் அர்ச்சகராக வரமுடியாது. ஆகமம் இல்லாத கோவில்களில் போகலாம். நீங்கள் என்ன செய்தாலும் நீங்க  ஒரு மயிறும் புடுங்க முடியாது. ஒழுங்கா இருந்துக்கோ” என மிரட்டினார்.

நேரடியாக பார்ப்பனர்களோ அல்லது அவர்கள் தூண்டுதலில் மற்றவர்கள் மிரட்டுவது, தாக்குதலில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. திருவண்ணாமலை அர்ச்சகர் பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருந்த பொழுது எங்களுக்கு ஆகமம் கற்றுக்கொடுத்த ஆசிரியரைத் தாக்கினார்கள். அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் வைத்து செயல்படுவதற்கு எதிராக என்னிடம் பேரம் பேசினார்கள். ஒத்து கொள்ளவில்லை என்பதால் தாக்கினார்கள்.

"கவனமாக அர்ச்சனை செய்யுங்கள்" என சொன்னதற்காக பெண் பக்தரை சிதம்பரம் தீட்சிதர்  கன்னத்தில் அறைந்தான். தேவாரம்பாட சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை  தாக்கினார்கள். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கைகாக அர்ச்சக மாணவர்களின் பிரதிநிதியாக  பத்திரிக்கை,  தொலைகாட்சிகளில் பேசி வருகிறேன். ஆகையால் பார்ப்பனர்களால் எனக்கும் ஏதாவது நடக்கலாம்.

எனவே தமிழக மக்களின் கவனத்திற்கும், தமிழக அரசின் கவனத்தி்ற்கும் பார்ப்பனர்களின் மிரட்டலை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகவே  இந்த பத்திரிக்கை செய்தியை வெளியிடுகிறோம்.

வா.அரங்கநாதன்,
தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் -  தமிழ்நாடு
9047400485

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை

தொடர்புடைய பதிவுகள்

கருவறைத் தீண்டாமைக்கு முடிவு எப்பொழுது?


No comments:

Post a Comment