Monday 20 July 2020

மூத்த வழக்குரைஞர் முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இதய அஞ்சலி!

நம்முடன் இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை செயல்பாட்டாளராக இருந்த மூத்த வழக்குரைஞர் முத்து கிருஷ்ணன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னளவில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தாலும், இந்துத்துவ மதவெறியை தூண்டி, நாட்டை துண்டாடும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜெ.பி. இந்துத்துவக் கும்பலை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர். ஆரம்ப காலங்களில் காங்கிரஸ், ஜனதா கட்சியில் இருந்தவர். அவர் பேசிய உரைகள் இன்றைக்கும் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றன.


  • அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ம் ஆண்டு அயோத்தி வழக்கிற்கு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து நாம் நடத்திய கருத்தரங்கத்திலும், பின்பு உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கிற்கு வழங்கிய இறுதித் தீர்ப்பினை எதிர்த்து நாம் கடந்த ஆண்டு நடத்திய கருத்தரங்கத்திலும், சமீபத்தில் செய்த பெரிய அறுவை சிகிச்சை செய்திருந்த போதிலும் பங்கேற்று, தனது எதிர்ப்பைத் தெளிவாகவும், துணிவாகவும் முன்வைத்தார்.

இவர் தொடர்ந்து நாம் முன்னெடுக்கும் சட்ட ரீதியான செயல்பாடுகளுக்கு ஆலோசனை தந்துகொண்டும், நம்முடைய நல்ல சமூக செயல்பாடுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டும் நம்மை அன்பாக அரவணைத்தும் வந்தார். நாம் வயதில் சிறியவர்கள், இளைஞர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாகவும், நட்பாகவும் பழகும் தம்மை உடையவர்.

அவருக்கு வயது 79. அவருடைய மகன் அருண்குமார் மூலம் நாம் இரங்கல் செய்தியை அறிந்தோம். மேலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் அனைவருக்கும் இவரது இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. அவர்கள் அனைவருக்கும் எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை.

தொடர்புடைய பதிவுகள்:
CAA வுக்கு எதிரான அவரது உரை
https://m.facebook.com/story.php?story_fbid=2542734939345536&id=244283735645979&sfnsn=scwshwa&extid=1tIcmRnBOstpREYn&d=w&vh=e

No comments:

Post a Comment