Tuesday 18 August 2020

கரோனா நிவாரணப் பணியில் வடசென்னை மக்கள் உதவிக் குழு!

 நண்பர்களே,

தொடர்ந்து அரசு அறிவித்து வரும் ஊரடங்கால், பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. பல தொழில்களுக்கு இன்னும் அரசு அனுமதி தரவில்லை. ஆகையால், இன்றும் வாழ்வாதார நெருக்கடியில் மக்கள் இருக்கிறார்கள்.  ஆகையால், வட சென்னை மக்கள் உதவிக்குழு தொடர்ந்து மக்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த வியாழக்கிழமை அன்று (06/08/2020) நூறு பேருக்கு ஒரு குடும்பத்திற்கு தேவையான‌ அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு  உள்ளிட்ட மளிகைத் தொகுப்பை வழங்கினோம். 

குழு ஆரம்பித்ததிலிருந்து இதுவரை ஆயிரத்து பத்து பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்.  இன்றைய பயனர்களில் 25 பேர் புதுவண்ணை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கும் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும், 75 பேர் தமிழ்த் திரைப்படத் துணை நடிகர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது.

நாம் மேலே சொன்னது போல ஊரடங்கில் இன்னும் பல தொழில்கள் முடங்கித்தான் போயிருக்கிறது. ஆகையால், மக்களுக்குத் தேவையும் அதிகமாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் ஊரடங்கு அறிவித்த‌ அரசு தான் கவனம் கொடுத்து செய்ய வேண்டும்.  ஆனால், செய்வதில்லை. நம் மக்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம்மால் இயன்ற சிறிய உதவிகளைச் செய்துவருகிறோம்.

ஆகவே, இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இயன்றவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சிரமப்படுபவர்கள் உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளவும் ,

நன்கொடை அளிக்க ,

C. Noordeen.  Canara Bank, 

Thambuchetty Street Branch. 

S.B. A.C.No.  0913101289441. 

IFSC. CNRB0000913.

G pay no. 9884189570

பின்குறிப்பு :  உதவி பெறுகிறவர்களின் முகங்களை எப்போதும் மறைப்போம். இப்பொழுது அனைவருமே மாஸ்க் அணிந்திருப்பதால், முகங்களை மறைக்கவில்லை.

தகவல்:

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை

No comments:

Post a Comment