Saturday 16 May 2020

டாஸ்மாக் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

டாஸ்மாக் வழக்கு

16.05.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடந்தது என்ன?

மதுக்கடைகள் திறப்பதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன?
நாம் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் அதிகாரம் மற்றும் மகளிர் ஆயம் அமைப்புகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் டாஸ்மாக் திறப்பதை எதிர்த்து வழக்கு நடத்தும் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்டன் அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.
14.05.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தத என்ன?

கரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம்,மகளிர் ஆயம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகள் 14.05.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

நமது சார்பாக மூத்த வழக்குரைஞர்கள் வைகை மற்றும் பாலன் ஹரிதாஸ் அவர்கள் இருவரும் ஆஜராகி, கரோனா நோய்த்தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதல்ல, கொள்கை முடிவாயினும் மக்கள் நலனுக்கு எதிராக இருப்பின் அதில் நீதிமன்றம் தலையிட்டு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமை மற்றும் கடமைகளை (Article 47 & 21) உறுதி செய்ய வேண்டும் என பல வழக்குகளை மேற்கோள்காட்டி சிறப்பான வாதங்களை முன்வைத்தனர்.

அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் கூடுதல் அவகாசம் கேட்டதன் அடிப்படையில், மனுதாரரின் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளித்து விரிவான பதில் மனுவை 15.05.2020 அன்று தாக்கல் செய்யக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் சாரத்தை வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்ட்டன் விளக்குகிறார்.
தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு! மக்கள் போராட்டத்தால் மாறியத் தீர்ப்பு !

No comments:

Post a Comment