Wednesday 27 May 2020

கரோனா : மக்களுக்கு நிவாரண உதவி









நண்பர்களே ,

வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக ஊரடங்கு அறிவித்த மறுவாரத்திலிருந்து இந்தக்குழு உருவாக்கி, இதுவரை அறுநூற்று ஐம்பது (650) குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளோம்.

இன்று (26/05/2020) நமது நண்பர் திரு. முனுசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம் புதுவண்ணை பகுதியில் நடத்தப்பட்டது. அவர் கடந்த காலங்களில் நம்முடன் மக்கள் பணியில் ஈடுபட்டவர். அவரின் சமூக பங்களிப்பை பற்றி பழகிய நண்பர்கள் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக ஊரடங்கால் பாதிக்கப் பட்ட புதுவண்ணை பகுதியை சேர்ந்த உணவுக்கே கஷ்டப்படும் ஐம்பது குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரிசி, பருப்பு, சமையல், எண்ணெய், கோதுமை, சேமியா பாக்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பகுதியில் சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். எழுத்தாளர் பாக்கியம் சங்கரும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நிவாரண பணிகளை செய்த படியால் வேறு பகுதி இளைஞர்களும் நமது குழுவில் இணைந்து செயல்பட தூண்டியுள்ளது. மேலும் நிவாரண பணிகளை தொடர்ந்து எடுத்துச்செல்லும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது .

நாம் தொடர்ந்து செய்யும் நிவாரண உதவிகள் அறிந்து நமக்கு பல நண்பர்களும், மக்களும் தொடர்ந்து நன்கொடை கொடுத்து வருகிறார்கள். ஊரடங்கால் அவதிப்படும் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து, தாய்லாந்து நாட்டில் ரயாங் பகுதியைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் கொடுத்த நன்கொடையால் ஏற்கனவே பாரிமுனைப் பகுதியில் 100 பேருக்கு நிவாரண உதவிகள் செய்திருந்தோம். இப்பொழுது செய்கிற உதவியிலும் அவர்களுடைய பங்கு பெரும்பான்மை. ஆகையால் அவர்களுக்கு நன்றி.
மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். உதவி தேவைப்படுபவர்களும் அழையுங்கள்.
 
#தொலைபேசி_எண்கள்:

9941314359
8825643335
7397468117
 
#நன்கொடை அளிக்க :

C. Noordeen,
Canara bank,
Thambuchetty street branch.
S.B. A.C.No. 0913101289441
IFSC Code : CNRB0000913
Gpay no . 9884189570
 
#குறிப்பு:

1. உதவி பெற்றவர்களின் சில புகைப்படங்கள் மட்டும்.

2. உதவி பெற்றவர்களின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
 
#வடசென்னை மக்கள் உதவிக்குழு,
சென்னை

No comments:

Post a Comment